கேப்டன் விஜயகாந்த் பெருந்தன்மையால் பெரும் புகழை அடைந்துவிட்டார் நகைச்சுவை சரவெடி வடிவேல்

நகைச்சுவை என்றாலே கவுண்டமணி, செந்தில் க்கு பின்னால் நமக்கு உடனே நினைவுக்கு வரக்கூடியவர் நடிகர் வடிவேலு தான். இவரின் பாடி லாங்குவேஜ் நடிக்கின்ற விதம்  வசனங்களை கையாளக்கூடிய திறன் போன்றவற்றால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவரை நகைச்சுவையை ரசிக்காதவர்கள் இல்லை என்று கூறும் அளவுக்கு  திறமை மிக்கவர்.

அது போல 1970களில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இரண்டு மொழிகளிலும் அதிரடி ஆக்ஷன் படங்களில் நடித்தார். இவரின் கேப்டன் பிரபாகரன் படத்துக்குப்பிறகு அனைவராலும் கேப்டன் என்று அன்புடன் அழைக்கப்பட்ட இவர் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக இருந்தார்.

போலீஸ் ஆபீஸர் வேடம் என்றால் அது விஜயகாந்துக்கு நன்றாக பொருந்தும் என்று திரைத்துறையில் நினைப்பவர்கள் ஏராளமாக உள்ளார்கள். அந்த அளவுக்கு அந்த வேடம் அவருக்கு மிகவும் பொருத்தமாகவும், அவர் பேசக் கூடிய வசனங்கள் மக்களை ஈர்க்கும் விதத்தில் இருந்தது.

வடிவேலுவின்  திரையுலகத்திற்கு வருவதற்கு முன்னால் அதிக வாய்ப்புகள் இல்லாத சமயத்தில்  கேப்டன் விஜயகாந்த் தனது சின்னக்கவுண்டர் படத்தில் நடிப்பதற்கு ஒரு சிறிய வேடத்தை கொடுத்தார்.

 அதன் மூலம் அவருக்கு அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. விஜயகாந்த் உடன் ஏற்பட்ட ஒரு சிறிய மனக்கசப்பு காரணமாக இவரது கூட்டணி பிரிந்து. மேலும் அது அரசியல் ரீதியான பிரச்சனையாக உருவெடுத்தது. இதன் காரணமாக இவருக்கு திரையுலகில் இருந்து விலகி இருக்கும் நிலை ஏற்பட்டது என்று கூறலாம்.

---- Advertisement ----

 கஷ்டப்பட்ட காலத்தில் கேப்டன் செய்த உதவிகளை மறந்து இவர்  தேர்தல் சமயத்தில் கேப்டனுக்கு எதிராக நின்று அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு விஷயத்தையத்திலும் கேப்டனை தாக்கும் விதமாக இவர் பேச்சு இருந்தது.

 நமது கேப்டன் அது பற்றி கவலைப்படாமல் மேலும் இந்த விஷயம் பெரிதாகாமல் அப்படியே இருக்கட்டும் என்று அனைவரையும் சமாதானம் செய்ததோடு மிகவும் பெருந்தன்மையோடு நடந்து கொண்டதுதான் ஆச்சரியத்தை தந்தது.  எந்த சமயத்தில் எப்படி நடக்க வேண்டும் என்பதை தனது ரசிகர்களுக்கு உணர்த்திய சரியான தலைவர் தற்போது இப்படி இருக்கிறாரே என்று ஒவ்வொரு ரசிகர்களும் கண்ணீர் விட்டு அழுகிறார்கள்.

---- Advertisement ----