நடிகர் ஜெயம் ரவி இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி கூட்டணியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் கோமாளி.
தொண்ணூறுகளில் கோமாவிற்கு சென்ற ஒருவர் திடீரென நிகழ்காலத்தில் கண்விழித்தால் அவர் எந்தெந்த விஷயங்களை வித்தியாசமாக பார்ப்பார்.
அவருடைய நடவடிக்கைகள் எப்படி இருக்கும். அதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள். அதனை அவர் சமாளித்த விதம் இதுதான் படத்தின் கதையாக இருந்தது.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற இந்த திரைப்படத்தில் பஜ்ஜி கடை ஆன்ட்டி என்ற ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரபல நடிகை கவிதா ராதேஷ்யம். உண்மையில் இவர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தவர்.
ஆனால் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் மோசமான படங்கள் மற்றும் வெப் சீரியஸ்களில் நடிக்க ஆரம்பித்தார் தற்பொழுது அந்த மாதிரியான படங்களில் நடிக்கக்கூடிய ஆபாச பட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சமீபத்திய ஒரு பேட்டியில் கலந்து கொண்ட இவரிடம் ஒரு நடிகையாக ரசிகர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல ஆசைப்படுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
நான் சினிமாவுக்குள் வருவதற்கு முன்பு சினிமாவைப் பற்றி என்னென்னமோ நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் சினிமாவில் ஒரு நடிகையாக பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது என்னுடைய பார்வையே வேறு மாதிரி இருக்கிறது.
ரசிகர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால் நடிகைகளை நினைத்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். கனவில் அவர்களோடு நீங்கள் டூயட் பாடலாம்.. அவர்களோடு ரொமான்ஸ் செய்யலாம்.. அல்லது அவர்களை நினைத்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
ஆனால், நடிகைகளை திருமணம் செய்து கொள்ளலாம் என்று மட்டும் ஆசைப்பட்டு விடாதீர்கள். அது ஒரு மோசமான முடிவாக இருக்கும். சினிமா துறைக்கு வெளியே இருந்து பார்க்கும்போது அந்த நடிகை அப்படி இந்த நடிகை இப்படி என்று கிசு கிசுக்கள் வருவதை பார்த்திருக்கிறேன்.
ஆனால் சினிமா துறைக்குள் நான் இருக்கும் பொழுது அவற்றையெல்லாம் நேரடியாக பார்க்கக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பெரிய நடிகை முன்னணி நடிகை என்றெல்லாம் நான் நினைத்துக் கொண்டு.. நம்முடைய இன்ஸ்பிரேஷன் என்று நினைத்துக் கொண்டிருக்கக்கூடிய நடிகைகள் எல்லாம் சினிமாவில் செய்யும் வேலைகளை பார்த்தால் இவர்களையா அப்படி நாம் நினைத்துக் கொண்டிருந்தோம் என்றெல்லாம் யோசிக்க தோன்றுகிறது.
அதனால் ரசிகர்கள் நடிகைகளை பார்த்து ரசிகர்கள் அவர்கள் நினைத்து எது வேண்டுமானாலும் செய்யுங்கள் ஆனால் திருமணம் செய்து கொள்ள வேண்டும் ஆசைப்பட்டு விடாதீர்கள் என்று பதிவு செய்திருக்கிறார் நடிகை கவிதா ராதேஷ்யம்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.