“கடன் தொல்லையில் இருந்து தப்பிக்கணுமா..!” – அதுக்கு ஆண்கள் இத செஞ்சா போதும்..!

தேவைகள் அதிகரிக்கும் போது பணம் சிக்கல்கள் ஏற்படுவது வாடிக்கை. அப்படி பல சிக்கல்கள் ஏற்படும் போது அதை எளிதாக சமாளிக்க கடன் பெறுவதை வழக்கமாக அனைவரும் கொண்டிருக்கிறார்கள். வாங்கிய கடனை வட்டியோடு கட்ட வேண்டும் இல்லை என்றால் அந்த கடனை விரைவில் அடைக்க வேண்டும்.

கடனை அடைக்க முடியவில்லை. வட்டி மேல் வட்டி கட்டி குடும்ப பொருளாதாரம் சீர்குலைவதோடு குடும்பத்தில் மன நிம்மதி இல்லாத நிலை ஏற்படும் போது என்ன செய்வது என்று தெரியாமல் நீங்கள் தவிப்பீர்கள்.

அப்படிப்பட்ட நிலையில் இருக்கக்கூடிய நீங்கள் உங்கள் கடனை எளிதில் அடைக்க உங்கள் வீட்டில் இருக்கும் ஆண்கள் கீழே குறிப்பிட்டு இருக்கக்கூடிய பரிகாரத்தை செய்தாலே போதுமானது.

கடனை எளிதில் தீர்த்து வைக்கும் பரிகாரம்

கடன் தொல்லையால் அவதிபடக்கூடிய நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் ஆண்களைக் கொண்டு இந்த பரிகாரத்தை செய்யச் சொல்லுங்கள்.

இந்த பரிகாரத்தை செய்வதல் மிகவும் எளிதான ஒன்று. இந்த பரிகாரத்திற்காக நீங்கள் பயன்படுத்த வேண்டியது கடுகு எண்ணெய், பஞ்சு திரி, அகல் விளக்கு இவை மட்டும்தான்.

---- Advertisement ----

அருகில் இருக்கக்கூடிய கோயில்கள் அது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை, எந்த தெய்வமாக இருந்தாலும் பரவாயில்லை. அந்த கோயிலுக்குச் சென்று நீங்கள் இந்த விளக்கை ஏற்ற வேண்டும் இந்த விளக்கை ஏற்றுவதற்கு முன்பு நீங்கள் கடுகு எண்ணெயை விளக்கில் ஊற்றி கிரியை போட்டு தீபத்தை ஏற்க வேண்டும்.

 அப்படி தீபத்தை ஏற்றுவதற்கு முன்பு திரியின் மேல்பகுதியில் ஒரு கிராம்பின் மொத்த பகுதி மேல் நோக்கி இருப்பது போல வைத்து விளக்கை ஏற்றி இறைவனை மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

அதுமட்டுமல்லாமல் உங்கள் வேண்டுதலை முடித்த பிறகு ஐந்து நிமிடம் அமர்ந்து உங்கள் பிரார்த்தனையை கடவுள் முன் வைத்துவிட்டு அதன் பிறகு கோயில் சன்னிதானத்தை மூன்று முறை சுத்தி வாருங்கள்.

இதுபோல இந்த விளக்கை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் ஆண்கள் ஏற்றி வர வீட்டில் ஏற்பட்டிருக்கும் கடன் சுமை குறையும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. வீட்டில் இந்த தீபத்தை ஏற்றலாமா என்ற கேள்விக்கு வீட்டில் ஏற்றுவதை விட கோயிலுக்கு சென்று ஏற்றுவதன் மூலம் தான் முழு பயனையும் நீங்கள் பெற முடியும் என்பதை உணர்ந்து அருகில் இருக்கும் கோயிலுக்குச் சென்று நீங்கள் விளக்கை ஏற்றுங்கள்.

---- Advertisement ----