லைட் ஆஃப் பண்ணா தான் அதை பண்ணுவேன் என சொன்னேன்.. – ரகசியம் உடைத்த தேவிப்பிரியா..!

நடிகை தேவிப்பிரியா சீரியல் நடிகை என்பதை தாண்டி சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட் ஆவார். தன்னுடைய இளமைக்காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கக்கூடிய இவர் தற்பொழுது சீரியல்களில் வெள்ளியாக நடித்து வருகிறார்.

மேலும் திரைப்படங்களில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் பணியாற்றி வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர் நிறைய திரைப்படங்களுக்கு நான் டப்பிங் பேசி இருக்கிறேன்.

நிறைய நடிகைகளுக்கு பேசி இருக்கிறேன். புதுப்பேட்டை திரைப்படத்தில் நடிகை சினேகாவுக்கு டப்பிங் பேசி இருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த ஒரு கதாபாத்திரமாக இருந்தது.

அதன் பிறகு சீமராஜா திரைப்படத்தில் நடிகை சிம்ரனுக்கு டப்பிங் பேசி இருக்கிறேன். ஒருமுறை வெற்றிமாறன் சார் படங்களில் இரண்டு படங்களில் டப்பிங் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

குறிப்பாக ஆடுகளம் படத்தில் டப்பிங் பேசும் பொழுது எடுத்தவுடன் கெட்ட கெட்ட வார்த்தைகளாக இருந்தது.

எனக்கு ஒன்றும் புரியவில்லை சார் என்ன சார் இதெல்லாம் என்று வெற்றிமாறன் சாரை அழைத்து கேட்டேன்.

அவர் படத்தில் வரக்கூடிய வசனம் தான் இது. பீப் போட்டு விடுவார்கள் இருந்தாலும் நீங்கள் பேசுங்கள்.. அப்போது தான் வசனத்தில் அந்த உணர்வு வரும் என்று கூறினார்.

பேசுகிறேன் ஆனால், விளக்கை எல்லாம் அனைத்து விடுங்கள்… விளக்குகளை அனைத்தால் தான் நான் பேசுவேன் என்று கூறினேன் அவர்கள் விளக்கை அனைத்ததும் கடகடவென அந்த வார்த்தைகளை பேசி முடித்து விட்டேன் என்று கூறியிருக்கிறார் நடிகை தேவிப்பிரியா.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …