பட வாய்ப்புக்காக இப்படி நடிக்கவும் ரெடி.. திவ்யா பாரதி கூறிய பகீர் தகவல்..!

சில நடிகைகள் மட்டுமே தமிழ் சினிமாவில் ஒரே திரைப்படத்தின் மூலமாக பெரும் உயரத்தை தொடுவார்கள். அப்படியான ஒரு சில நடிகைகளில் நடிகை திவ்யா பாரதி முக்கியமானவர் என்று கூறலாம்.

நிறைய திரைப்படங்களில் நடித்தும் கூட தமிழில் பல நடிகைகளுக்கு எப்பொழுதும் பெரிதாக வரவேற்பு கிடைத்தது இல்லை. நடிகை அஞ்சலி எல்லாம் நிறைய திரைப்படங்களில் நடித்த பிறகுதான் ஓரளவுக்கு தமிழ் சினிமாவில் வரவேற்பு பெற்றார்.

ஆனால் தற்சமயம் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் சின்ன சின்ன நடிகைகளை கூட பெரிய அளவில் பிரபலப்படுத்தி விடுகிறது. முதன்முதலாக டிக் டாக் செயலி மூலமாக கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தவர்தான் திவ்யா பாரதி.

சமூக வலைத்தளம் மூலம் அறிமுகம்:

இதற்கு முன்பு மாடலிங் துறையில் இருக்கும் பெண்களுக்குதான் பெரும்பாலும் கதாநாயகி ஆவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் இப்பொழுது எல்லாம் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் பெண்களுக்கும் கூட நடிகைகள் ஆவதற்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன.

---- Advertisement ----

அந்த வகையில் டிக் டாக் செயலி மூலமாக பிரபலமாக இருந்ததால் திவ்யபாரதிக்கும் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தது. இந்த நிலையில் அவர் முதன் முதலாக நடித்த திரைப்படம் பேச்சிலர்.

இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் அதிக கவர்ச்சியுடன் நடித்திருந்தார் திவ்யபாரதி பெரும்பாலும் முதல் படத்தில் நடிக்கும் போது கதாநாயகிகள் பெரிதாக கவர்ச்சி காட்ட மாட்டார்கள்.

சர்ச்சையான காட்சிகள்:

ஆனால் திவ்யபாரதி முத்த காட்சிகளுக்கு கூட எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் காரணமாக அவர் கொஞ்சம் பிரபலம் அடைந்த கதாநாயகியாக மாறினார். இதனை தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவிலும் மற்ற மொழிகளிலும் அதிக வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன என்று கூறலாம்.

பேச்சுலர் திரைப்படத்தை தொடர்ந்து மதில் மேல் பூனை என்கிற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் திவ்யபாரதி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

படவாய்ப்புக்காக இதை செய்வேன்:

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய திவ்யபாரதி கூறும்போது தன்பாலின ஈர்ப்பாளராக நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தால் கூட நடிப்பதற்கு ரெடி என கூறியுள்ளார். வாய்ப்புகள் வேண்டும் என்பதற்காக எந்த கதாபாத்திரத்திலும் நடிப்பதற்கு தயாராக இருக்கிறாரே திவ்யபாரதி என இதுக்குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர் நெட்டின்கள்.

---- Advertisement ----