இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

கனவுகள் என்பது பன்மடங்கு தன்மை கொண்டதாகும். அறிவுறுத்தல்கள் அல்லது வெளிப்பாடுகள் நம்முடன் தொடர்பு செய்ய முயற்சிப்பது கனவு என்றும் பெரும்பாலும் புரிவதில்லை. இதனை சரியான வழிகள் நாம் கவனமாகப் புரிந்து கொண்டால் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கான பல்வேறு நுண்ணறிவுகளை நாம் பெறலாம். 

இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன நடக்கும் 

இறந்த பிறகு இறந்தவர்களுக்கு நுண்ணியமான  சக்தி கிடைக்கிறது. நீங்கள் விழித்திருக்கும் நிலையில் இருப்பதை விட தூக்கத்தில் தான் அவர்கள் உங்களுடன் சுலபமாக தொடர்பு கொள்ள முடியும். 

நீங்கள் விழித்திருக்கும்போது உங்களது ஐம்புலன்களும் வேலை செய்து கொண்டிருக்கும். அதனால் தங்களை இறந்த ஆன்மாக்கள் தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறது என்பதை மிக உயர்ந்த ஆன்மிக பீடனத்தை அடைந்தவர்களை தவிர மற்றவர் உணர்ந்து கொள்ள முடியாது.

கனவுகளின் போது நுட்பமான செய்திகளுக்கும் நாம் ஆனது அதிகமாக செவிசாய்க்கும். அதனால்தான் இறந்தவர்கள் உங்களை கனவில் தொடர்பு கொள்ளும் முறையை தேர்ந்தெடுக்கிறார்கள். இறந்தவர் உயிருடன் இருக்கும்போது அவருக்கு செய்ய வேண்டியதை சரியாக செய்யவில்லையே என்ற குற்ற உணர்வு அல்லது மனவருத்தம் உங்களை வதைக்கலாம். 

---- Advertisement ----

அப்படிப்பட்டவர்களுக்கு கனவில் இறந்தவர்கள் தோன்றலாம் .அவர்களின் இழப்பு உங்களுக்கு அதிக பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தால் அவர்களை நீங்கள் கனவில் காணலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நம் ஆழ் மனதில் ஆழமாக வேரூன்றிய நாம் உணர்வுகளின் வெளிப்பாடே கனவு என்று நாம் சொல்லலாம். 

இறந்துபோன சொந்தக்காரர் அல்லது நண்பரோ உங்கள் கனவில் தோன்றுவதற்கு காரணங்கள்

சில சமயம் இறந்துபோன ஆத்மாவுக்கு பூமியில் வாழும் சந்ததியினர் வழியாக ஏதேனும் உதவி தேவைப்படலாம். மேலும் உங்கள் உதவி மூலமாக யாரையாவது பழி தீர்க்க எண்ணி வைக்கலாம் அல்லது குடும்பம் நண்பர்கள் வட்டாரத்தில் யாரோடு தொடர்பு கொள்ள நினைக்கலாம். 

முதலில் கூறியது முதன்மையாக காரணமாக கருதப்பட்டாலும் இரண்டாவது கூறியது மிக அதிக ஒரு கனவு குறைந்தது மூன்று முறைக்கு மேல் வந்தால் அதை ஆன்மீகம் சார்ந்த கனவாக கூறலாம்.

இறந்த ஆத்மா நீங்கள் ஏதாவது செய்வீர்கள் என்ற உங்கள் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்தால் அது உங்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்யும். 

இறந்தபிறகு சாந்தி கிடைக்க அல்லது தடைகளை நீக்க உங்களிடம் அதற்கான உதவியை எதிர் நோக்கி கனவில் வரலாம். 

நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு இருத்தல் இயற்கை வழிகளில் மரணிப்பவர்களுக்கு அவர்களின் மரணத்தை எதிர்நோக்க முடியும் 

.ஆனால் இறந்த பிறகு அவர்கள் பாதையில் செல்ல அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. ஆனால் எதிர்பாராத காரணங்களால் கொடூர மரணங்கள் சந்தித்தவர்கள் மனரீதியாக சாவிற்கு தயாராக இருக்க மாட்டார்கள். அதனால் இறந்த பிறகு அவர்கள் சாந்தி அடைய முடியாது. சாந்தி அடையும் நோக்கில் அவர்கள் உங்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம். 

முதற்கட்டமாக அவர்களின் நினைவில் இருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்றால் அவர்களின் நினைவு உங்களை வாடுவதை தவிர்க்க வேண்டுமென்றால் நீங்கள் ஸ்ரீ குருதேவ தத்த மந்திரத்தை தொடர்ச்சியாக ஜெபிக்க வேண்டும்.  

குடும்ப உறுப்பினர் அடிக்கடி கனவில் தோன்றினார் நாராயண நாகபலி அல்லது திரிபிண்டி போன்ற சடங்குகளை மேற்கொள்ளலாம்.அத்தகைய சடங்குகளில் சாஸ்திரிகள் மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாகும் ஆத்மாக்கள் சாந்தி அடைய இது மிகவும் உறுதுணையாக இருக்கும்

---- Advertisement ----