ஒண்ணா போனா சிக்கிடுவோம்.. நீ மொதல்ல போ.. நான் பின்னால வரேன்.. வெளிநாட்டில் கும்மாளம் போடும் ஜோடி..!

தமிழ் சினிமாவில் பிரபலமான ஹீரோ என்ற நட்சத்திர அந்தஸ்தில் இருப்பவர்தான் அந்த ஆறு எழுத்து நடிகர். அந்த ஆறு எழுத்து நடிகர் குடும்பப் பின்னணியில் மூலம் சினிமா துறையில் நுழைந்தார்.

தொடர்ந்து குடும்பத்தின் உதவியாளும் அவர்களின் ஊக்கத்தினாலும் தமிழ் சினிமாவில் நல்ல பெயரை எடுத்திருக்கிறார் என்றாலும் அவர் தனது தனிப்பட்ட முயற்சியின் மூலமாக தான் தனித்து நிற்க முடிகிறது என கூறப்படுகிறது .

ஆறு எழுத்து நடிகரின் அலப்பறை:

அந்த அளவுக்கு இவர் திறமையான நடிகராக தமிழ் சினிமாவால் பார்க்கப்பட்டு வந்தார். ஆரம்பத்தில் சில வெற்றி படங்களில் நடித்தாலும் பின்னர் அவரது திரைப்படங்கள் சற்று சறுக்கலைய சந்தித்தது.

இருந்தாலு அவர் மிகப்பெரிய மார்க்கெட் வைத்திருப்பதால் அவரது திரைப்படங்கள் வெளியாகி தோல்வி அடைந்தாலும் கூட பாக்ஸ் ஆபிஸ் லெவலில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களாகவே பார்க்கப்படுகிறது.

---- Advertisement ----

சிறந்த நடிகர் என்பதை தாண்டி இவர் பெண்கள் விஷயத்தில் மிகவும் மோசம்… வீக் என கூறுகிறார்கள். நடிகருக்கு குடும்பம் குழந்தைகள் என இருந்தும் கூட பிரபலமான நடிகை ஒருவருடன் ரகசிய உறவு இருப்பதாக தற்போதைய செய்தி ஒன்று அம்பலமாகி இருக்கிறது.

நடிகையுடன் ரகசிய உறவு:

இது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த நடிகரின் வீட்டிலும் பூதாகரமாக வெடித்திருக்கிறது.

மேலும் அவரது படங்களின் தோல்விக்கும் அந்த நடிகை தான் காரணம். அதாவது நடிகர் திரைப்படங்களின் கவனம் செலுத்தாமல் இருப்பதால்தான் படம் அட்டர் பிளாப் ஆகிறது என சில நண்பர் வட்டாரங்கள் எடுத்துக் கூற அந்த நடிகை உடனான உறவை துண்டித்துக் கொள்ள முயற்சிகள் செய்தாலும் அவரால் முடியவில்லையாம்.

அந்த அளவுக்கு நடிகை மீதான மோகம் அவருக்கு அதிகமாகிவிட்டதாம்.ஆரம்பத்தில் ஏகப்பட்ட கிண்டல் கேலி விமர்சனம் இது எல்லாவற்றையும் சந்தித்து பின்னர் தனது திறமையால் இன்று நட்சத்திரம் நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்திருந்தும் என்ன பயன்?

அவர் திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் சிறந்த நடிகராக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து தவறி போய் பெண்கள் விஷயத்தில்சிக்கிக்கொண்டதால் அவராலே அவர் நினைத்தாலும் வெளியில் வர முடியாத அளவுக்கு மோகத்தில் மூழ்கி கிடக்கிறாராம்.

அந்த பிரபல நடிகர். கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த மூன்று திரைப்படங்களும் தோல்வி ஆகிவிட்டது. ஆனாலும் அந்த திரைப்படங்கள் அத்தனையும் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் வசூல் ரீதியாக சக்கை போடு போட்டுவிட்டது.

தோல்விக்கும் அஞ்சாத நடிகர்:

இதனால் தன்னுடைய நாற்காலியை எந்த ஒரு தோல்வியும் அசைத்துப் பார்க்க முடியாது என்ற ஒரு மிதப்பில் அந்த நடிகர் இருந்து வருகிறாராம்.

இப்படி பிஸியான நடிகராக இருந்து வரும் இந்த சமயத்திலும் கூட நடிகை ஒருவரை அழைத்துக் கொண்டு ரகசியமாக வெளிநாட்டிற்கு ட்ரிப் சென்று இருக்கிறாராம்? அந்த ஆறு எழுத்து நடிகர்.

இருவரும் ஒன்றாக சேர்ந்து போனால் நிச்சயம் மாட்டிக் கொள்வோம் என முடிவெடுத்த அந்த நடிகர் நீ சென்னையில் இருந்து தனியாக கிளம்பி போ நான் பின்னாலே வரேன் எனக் கூறிவிட்டு பின்னர் இருவரும் சென்று ரகசியமாக கும்மாளம் போட்டு வருகிறார்கள்.

இந்த விஷயம் எப்படியோ கசிந்து நடிகரின் மனைவிக்கு தெரி வர அவரோ மிகப்பெரிய அதிருப்தியில் கோபத்தில் உறைந்துப் போய் கிடக்கிறாராம்.

இவருக்கு எப்படி சொன்னாலும் புரிவதில்லை அந்த அளவுக்கு நடிகையின் மோகத்தின் மூழ்கி விட்டார் என அவரது மனைவி மிகுந்த வேதனையில் இருக்கிறாராம்.

நடிகையுடன் வெளிநாட்டில் லூட்டி:

இந்த ஆறு எழுத்து நடிகர் மோஸ்ட் வான்டெட் இயக்குனர் ஒருவரின் படத்தில் நடித்த போது அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் அந்த நடிகை.

அப்போது இருவருக்கும் கெமிஸ்ட்ரி பற்றிக்கொண்ட காரணத்தால் தான் இவர்கள் இப்போதும் பிரியா உறவாக சேர்ந்தே இருக்கிறார்கள் என வெளிவரும் செய்திகள் கூறுகிறது .

இதில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவது என்னவோ அவரது மனைவி மற்றும் அவரது குடும்பம் தான். இருந்தாலும் மனைவி கணவர் மீது வைத்திருக்கும் அன்பால் அந்த நடிகையை தன் கணவரிடமிருந்து எப்படியாக பிரிக்க வேண்டும் என்று பலவிதங்களில் முயற்சி எடுத்து வருகிறாராம்.

ஆனாலும், அந்த முயற்சி தோல்வியில் முடிவதால் நடிகை மிகுந்த வருத்தத்தில் இருக்கிறாராம். எவ்வளவு பிரச்சனைகள் குடும்பத்தில் வந்தாலும் நடிகருக்கு நடிகையின் மீது இருக்கும் மோகம் மட்டும் போதாது போலே என கோலிவுட் கிசுகிசுக்கிறது.

---- Advertisement ----