தேவயானி உண்மை முகம்.. பலரும் அறியாத தகவல்கள்..! ரசிகர்கள் ஷாக்…!

பவ்யமான நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களை தன்வசப்படுத்தியவர் தான் நடிகை தேவயானி.

இவர் ஒவ்வொரு படத்திலும் மிகவும் நேர்த்தியான உடை அணிந்து குடும்ப பங்கான கதாபாத்திரங்களில் நடிப்பார்.

மிகவும் டீசன்டான வேடங்களில் நடித்து மக்கள் மனதில் இடத்தை பிடித்தார். எந்த ஒரு படத்திலும் படுக்கையறை காட்சி, முத்த காட்சியை நடித்து முகம் சுளிக்க வைக்கும் வகையில் தேவயானி நடிக்கவே மாட்டார்.

டீசண்டான நடிகை தேவயானி:

அவ்வளவு ஏன் கிளாமர் உடைகளை கூட அணிந்து அவர் எந்த ஒரு படத்திலும் பெரிதாக நடிக்க மாட்டார்.

---- Advertisement ----

லோ நெக் ஜாக்கெட், குட்டை பாவாடை, டூ பீஸ் உடை உள்ளிட்டவற்றில் தேவயானியை இதுவரை நம்மால் பார்த்திருக்கவே முடியாது.

அந்த அளவுக்கு மிகச் சிறந்த நடிகையாக பார்க்கப்பட்ட தேவயானி சிறந்து விளங்கி வந்தார். தமிழ் சினிமாவில் இவரை போல் ஒரு நடிகையை பார்க்கவே முடியாது என்ன கூறும் அளவுக்கு எடுத்துக்காட்டாக தேவயானி இருந்து வருகிறார்.

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தேவயானி தமிழ் சினிமாவில் நடிக்க வந்து இங்கு தமிழ் பெண்ணாகவே நடந்து கொண்டார்.

அதுதான் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது. கல்லூரி வாசல், காதல் கோட்டை, சிவசக்தி, சூரியவம்சம், நீ வருவாய் என உள்ளிட்ட பல வெற்றி படங்களில் தேவயானி நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஹீரோக்களான அஜித் , விஜய் என பல பிரபலங்களுடன் நடித்துள்ள தேவயானி ’கோலங்கள்’ உட்பட பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.

சுவர் ஏறி குதித்து காதல் திருமணம்:

இதனிடையே அவர் கடந்த 2001 ஆண்டு. பிரபல இயக்குனர் ஆன ராஜகுமாரனை காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.

தனது காதல் கணவரை கரம் பிடிப்பதற்காக தேவயானி வீட்டின் சுவர் ஏறி குதித்து தப்பித்து சென்றார். மேலும் துணிந்து பல முடிவுகளை எடுத்துள்ளார்.

பெற்றோர்கள் எதிர்ப்பு மீறி திருமணம் செய்து கொண்ட தேவயானி கணவருடன் தனிமையில் வாழ்ந்து வந்தார்.

இவர் தனது கணவருடன் சேர்ந்து சொந்த ஊரான ஈரோட்டில் உள்ள அந்தியூரில் பண்ணை வீடு ஒன்றும் அழகாக கட்டியுள்ளார்.

5 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள அந்த வீட்டை சுற்றி மரம் , செடி, கொடிகள் என இயற்கை சூழ்ந்து பார்த்து பார்த்து வடிவமைத்துள்ளார்.

அத்துடன் அந்த வீட்டில் நினைத்த நேரத்திற்கு எல்லாம் மழை பெய்யும் படி செயற்கை முறையில் மழை செட்டப் செய்து வைத்துள்ளனர்.

இவர்களுக்கு இனியா, பிரியங்கா என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் தேவயானி தற்போது குணசத்திர வேடங்களில் கூட நடித்து வருகிறார்.

அக்மார்க் ஹோம்லி நடிகை:

எந்த ஒரு படத்திலுமே கிளாமர் காட்டாமல் மிகவும் ஹோம்லியான கதாபாத்திரங்கள் இருந்தால் மட்டும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடிக்கும் தேவ்யானி ஒரு படத்தில் மட்டும் மோசமாக நடித்திருக்கிறார்.

ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் கிளாமர் உடைகளை அணிந்து கொண்டு நடித்தார் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

ஆம், 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தொட்டாச்சிணுங்கி படத்தில் பாடல் ஒன்றில் படுமோசமாக நடித்திருப்பார்.

அதிலும் உள்ளாடை அணிந்து கொண்டு மேலாடை கழட்டிவிட்டு படுமோசமாக கிளாமர் காட்டி நடித்திருப்பார்.

தேவயானியா இது? என்னை யாரும் நம்ப முடியாத அளவுக்கு அந்த காட்சியில் எல்லை மீறி கிளாமர் காட்டியிருந்தார்.

மேலும் சிவசக்தி என்ற ஐட்டம் பாடல் ஒன்றுக்கு அவர் எல்லை மீறிய காட்சியில் நடித்து முகம் சுளிக்க வைத்தார்.

தேவ்யானியின் உண்மை முகம்:

தேவயானி என் வாழ்க்கையில் துரதிஷ்டமாக அமைந்தது அந்த இரண்டு படங்கள் தான் என்று சொல்லும் அளவுக்கு அந்த இரண்டு படங்களை தவிர வேறு எந்த ஒரு படத்திலும் அப்படி நடிக்கவில்லை.

கிளாமரான உடைகளை அணிந்து படு கவர்ச்சியான ரோல்களில் நடித்ததே கிடையாது. இதுதான் தேவயானியின் ஸ்பெஷாலிட்டி.

அதனால்தான் தேவயானி என்றால் 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக இன்று வரை பார்க்கப்பட்டு வருகிறார்.

---- Advertisement ----