நடிகை கௌதமியின் மகளா இது..? அசுர வளர்ச்சி.. – வாயடைத்து போல ரசிகர்கள்.!

1990 களில் தமிழ் திரையுலகில் மாபெரும் நட்சத்திரமாக ஜொலித்த நடிகை கௌதமி கமலஹாசன் மற்றும்  பல தமிழ் பிரபல நடிகர்களோடு இணைந்து நடித்திருந்தார். இவர் 1998 ல் சந்தீப் பாத்தியா  வின் வரை மணந்து கொண்டு வெளிநாட்டில் குடும்பம் நடத்தினார். இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்புக்குப் பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக பிரிந்து விட்டார்கள்.

 இந்நிலையில் கௌதமிக்கு புற்றுநோய் ஏற்பட அந்த சூழ்நிலையில் கமலஹாசன் இவரை ஆதரிக்க, அதன் காரணமாக சுமார் 10 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார்கள். இதனையடுத்து தனது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கமலஹாசனை விட்டு பிரிவதாக அறிவித்த கவுதமி தற்போது தன் மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

தற்போது பேஷன் டிசைனராகவும், காஸ்ட்யூம்ராக  செயல்படும் கௌதமி தன்னை  பல பொது நல சேவைகளில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

 மகள் சுப்புலட்சுமியுடன் தனி வீட்டில் தற்போது வாழ்ந்து வரும் கௌதமி தனது மகளுக்கு எந்தவிதமான  படவாய்ப்புகள் இதுவரை வரவில்லை. அப்படி வந்திருந்தாலும் அதை அவர்கள் ஏற்றுக் கொள்வதாக இல்லை என்பது போன்ற கருத்தை தெரிவித்திருந்தார்.

 மேலும் இப்போது தனது மகளின் லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்ட இருக்கக்கூடிய கௌதமி தன் மகள் மிகவும்  அழகாகவும் ஒரு ஹீரோயினியின் நிலையில் தற்போது காட்சி அளிப்பது போல இருக்கக்கூடிய நிலையை எல்லா போட்டோக்களிலும்  காண முடிகிறது என்றார்.

---- Advertisement ----

இதற்கு ஏற்ப சுப்புலட்சுமியும் பலவகைகளில் போஸ் அளித்து இருக்கக்கூடிய இந்த போட்டோக்களை பார்க்கும்போது நமக்கும் அது போன்ற எண்ணமே தோன்றுகிறது.

இந்த புகை படங்களை கட்டாயம் திரைத்துறையில் இருக்கும் நபர்கள் பார்த்தால் இவருக்கு நிச்சயமாக வாய்ப்பு விரைந்து கிடைக்கும். ஆனால் அதை ஒத்துக் கொள்ளக்கூடிய மனநிலையில் கௌதமி இருப்பாரா? என்று தெரியவில்லை.

இதற்கான விடையை காலத்தின் கையில்தான் விட வேண்டும்.  இது தான் கட்டாயம் பதில் சொல்லும். அதிர்ஷ்டம் என்று ஒன்று இருந்தால் சுப்புலட்சுமியை நாம் விரைவில் வெள்ளித்திரையில் காணலாம்.

---- Advertisement ----