“குழந்தைகளுக்கு இது தெரியக்கூடாதுன்னு நெனச்சேன்.. ஆனால்.. யூட்யூபில். “புலம்பும் நடிகை ரம்பா..!

“குழந்தைகளுக்கு இது தெரியக்கூடாதுன்னு நெனச்சேன்.. ஆனால்.. யூட்யூபில். “புலம்பும் நடிகை ரம்பா..!

விஜயலக்ஷ்மி என்ற இயற்பெயர் கொண்டு திரைத்துறையில் ரம்பாவாக ஜொலித்தவர் நடிகை ரம்பா. இவர் முதன்முதலில் இவர் ஆந்திர பிரதேசத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் பல்வேறு தென்னிந்திய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இந்தி, கன்னடம், பெங்காளி, போஜ்புரி, தமிழ், தெலுங்கு இப்படி பல்வேறு மொழி படங்களில் அவர் பல எக்கச்சக்க படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக தமிழில் கலைஞர் தொலைக்காட்சியில் வெற்றி நிகழ்ச்சியாக பார்க்கப்பட்ட மாநாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக பங்கு பெற்று தான் இவர் மிகப்பெரிய அளவில் பெயரும் புகழும் பெற்றார்.

நடிகை ரம்பா:

ரம்பா 90ஸ் காலகட்டங்களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். பல்வேறு சூப்பர் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு அவர் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்:நடிகர் வினீத் குடும்பம் மனைவியை பார்த்துள்ளீர்களா..? லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..!

---- Advertisement ----

குறிப்பாக உழவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் 1993ஆம் ஆண்டு அறிமுகமாகி தொடர்ந்து சுந்தர புருஷன், சிவசக்தி, செங்கோட்டை, விஐபி,அருணாச்சலம், ராசி, ஜானகிராமன், காதலர் தினம்,

ஹிட் படங்கள்:

நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, உனக்காக எல்லாம் உனக்காக, பூமகள் ஊர்வலம், மின்சார கண்ணா, சுயம்வரம், என்றென்றும் காதல்,

ஆனந்தம், அழகிய தீயே, சுக்கிரன், ஒரு காதலன் ஒரு காதலி, பெண் சிங்கம் இப்படி பல்வேறு திரைப்படங்களில் நடிகை ரம்பா நடித்திருக்கிறார்.

ரம்பா மிகச்சிறந்த நடிகையாக மார்க்கெட் பிடித்துவைத்திருந்தபோது யாராலும் இவரை ஓவர் டெக் செய்ய முடியவில்லை. 16 வயதில் திரைத்துறையில் அறிமுகமான ரம்பா பார்க்கவே மிகவும் பவ்யமாக,

அவ்வளவு அழகாக பதின்ம வயதில் இருக்கும் புகைப்படங்கள் கூட அனைவருக்கும் கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக பாடல் காட்சிகளில் எவர் இவரது நடனம் மிகப்பெரிய அளவில் பேசப்படும்.

ஒரே ஒரு பாடல் அழகிய லைலாவில் பாவாடையை காற்றில் பறக்கவிட்டு அவர் போட்டதை இன்றுவரை ரசிகர்களால் மறக்கவே முடியாது என்று தான் சொல்ல வேண்டும்.

இதையும் படியுங்கள்:கசப்பான அனுபவம் குறித்து வெளிப்படையாக கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!

சிங்கப் பெண் படத்திற்கு பிறகு நடிகை ரம்பாவிற்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் மார்க்கெட் கொஞ்சம் மந்தம் தட்டிய நிலையில் திருமணம் செய்துக்கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

கணவருடன் விவாகரத்து?

2010ம் ஆண்டு கனடா தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்துகொண்ட ரேம்,ரம்பாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர்.

அதன் பின்னர் கணவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிகை ரம்பா அவரை விட்டு பிரிந்திருந்தார். பின்னர் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தனது கணவருடன் சேர்ந்தும் மறுபடியும் பழைய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

அதன் பிறகு அவருக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறார். தற்போது குழந்தை குட்டி என குடும்பத்தோடு மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து வரும் நடிகை ரம்பா சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது குடும்பம் மற்றும் குழந்தைகளை பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

என் பொண்ணுக்கு ஆறு வயசு வர வரைக்கும் நான் ஒரு நடிகை என்பதே தெரியவே தெரியாது ஸ்கூல்ல டீச்சர் சொல்லி என்கிட்ட வந்து கேட்டா அம்மா என்னுடைய டீச்சர் உங்களை youtube இல் காட்டி நீங்க பெரிய ஆக்ட்ரஸ்னு சொன்னாங்க…

குழந்தைகளுக்கு நான் நடிகை என்பதே தெரியாது:

அப்படின்னு வந்து என்கிட்ட கேட்டாங்க. அந்த டீச்சர் இடம் சென்று ஏங்க பசங்களுக்கு அது தெரியாமலே இருக்கட்டும் என்று சொன்னேன்.

அத்துடன் சில ஸ்டுடென்ட்ஸ் ஓட பேரண்ட்ஸ் வந்து என் குழந்தைக்கு சாப்பிடும் போதெல்லாம் வந்து ஹெல்ப் பண்ணுவாங்க ரம்பாவோட மகள் அப்படின்ற ஒரு நோக்கத்தில்…

குழந்தைகளுக்கு நான் ஒரு ஆக்ட்ரஸ்ல சொல்லி வளர்க்கவே கூடாது அப்படின்னு நினைக்கல ஆனால் அது எனக்கு பெருசா தெரியவில்லை.

இதையும் படியுங்கள்: எனக்கு புகைப்பிடிக்க கத்து குடுத்ததே இவரு தான்.. வெக்கமின்றி கூறிய நடிகை மீரா கிருஷ்ணன்..!

குழந்தைக்கு முன்னாடி இதெல்லாம் சொல்லணும் குழந்தை கிட்ட சொல்லணும் அப்படின்ற ஒரு எண்ணமே எனக்கு வரவே இல்ல.

எனக்கு அவங்கள பாத்துக்கணும், கேர் பண்ணனும் அப்படிங்கற எண்ணம் தான் முழுசா இருந்துச்சு. youtube மூலமாகத்தான் அவர்களுக்கு இதெல்லாம் தெரிந்தது.

எனவே யூடியூப் மூலமா தான் நான் ஒரு நடிகை அப்படிங்கிறதே அவங்க தெரிஞ்சிக்கிட்டாங்க என்று நடிகை ரம்பா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

---- Advertisement ----