பிரகாஷ் ராஜின் முதல் மனைவி இன்னும் 2’ம் திருமணம் செய்யாமல் இருக்க இப்படி ஒரு காரணமா..?

நடிகர் நடிகைகளுக்கு திருமண வாழ்க்கை என்பது கடலை மிட்டாய் சாப்பிடுவது போல் ஆகிவிட்டது.

தேவைப்பட்டால் சாப்பிடலாம் இல்லையென்றால் தூக்கி வீசி விடலாம் என்ற அளவுக்கு மிக சாதாரணமான விஷயமாக எண்ணிவிடுகிறார்கள்.

ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், பெற்றோர்கள் பார்த்து வைத்து மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்தாலும் ஒரு சில வருடங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்துவிட்டு பின்னர் இருவருக்கும் செட்டாகவில்லை கருத்து வேறுபாடு என்று ஒற்றை வார்த்தையில் ஒட்டுமொத்த உறவையும் தூக்கி எறிந்து விட்டு பிரிந்து விடுகிறார்கள்.

நடிகர், நடிகைகளின் பிடிப்பில்லாத வாழ்க்கை:

இது அவர்களுக்கு ஒரு மிகச் சிறிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பல பிரபல நடிகைகள் நடிகர்கள் ஒருவருக்கொருவர் விவாகரத்து செய்த செய்திகளை தொடர்ச்சியாக நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

---- Advertisement ----

அண்மை காலமாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சமீபத்தில் பிரபல இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் மற்றும் சைந்தவி இது போன்ற யாரும் எதிர்பார்க்காத வகை பல வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து திருமண பந்தத்தில் இருந்த பிரபலங்களே திடீரென விவாகரத்து அறிவித்து பெயர்ச்சி கொடுத்து இருக்கிறார்கள்.

அந்த வகையில். 1994 ஆம் ஆண்டு லலிதா குமாரி என்பவரை திருமணம் செய்து கொண்டவர் தான் நடிகர் பிரகாஷ்ராஜ் .

ஒரு சில ஆண்டுகள் இவர்களுடன் இவருடன் சேர்ந்து வாழ்ந்த பிரகாஷ்ராஜுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர்.

முதல் மனைவி உடன் விவாகரத்து :

மேக்னா மற்றும் பூஜா என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். வாழ்க்கை அழகாக சென்று கொண்டிருந்த சமயத்தில் பிரகாஷ்ராஜ் திடீரென தனது மனைவி லலிதா குமாரியை கடந்த 2009 ஆம் ஆண்டு மணமுறிவு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

இந்த விவாகரத்து அவரது மனைவி லலிதா குமரிக்கு பேரதிர்ச்சியாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு தற்போது வரை தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார். இரண்டு பெண் குழந்தைகளும் பிரகாஷ்ராஜுடன் வாழ்ந்து வருகிறார்கள் .

அதை எடுத்து விவாகரத்து ஆன அடுத்த வருடத்திலேயே பிரகாஷ்ராஜ் போனி வர்மா என்பவரை 2019 திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்த ஒரு மகன்தான் சித்து.

இரண்டாவது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் பிரகாஷ்ராஜ் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார்.

ஒரு வருடத்தில் மறுமணம்:

இப்படியான சமயத்தில் அவரது முதல் மனைவியின் பேட்டிகள் சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வெளியாகிய வைரல் ஆகிய வருகிறது .

கணவர் தன்னை விட்டு பிரிந்தாலும் அவர் மீது வைத்திருக்கும் காதலும் மரியாதையும் மக்களை மிகப்பெரிய அளவில் ஆச்சரியப்படுத்தியது என்றே சொல்லலாம்.

இப்படிப்பட்ட ஒரு மனைவியை அவர் இழந்துவிட்டார் என பலரும் அவருக்கு பலரும் பிரகாஷ் ராஜை திட்டி தீர்த்தனர்.

இந்நிலையில் பிரகாஷ்ராஜ் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக குடும்ப வாழ்க்கை நடத்தி வரும் நேரத்தில் அவரது முதல் மனைவி இதுவரை திருமணமே செய்யாமல் இருப்பதற்கான காரணத்தை வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

நான் என்னுடைய முதல் திருமண வாழ்க்கையில் உண்மையாகத்தான் இருந்தேன். விவாகரத்து நடந்தாலும் அந்த திருமண வாழ்க்கை எனக்கு மிகச் சிறப்பாக அமைந்தது.

இதனால் தான் திருமணம் செய்யல:

பல நல்ல ஞாபகர்த்தகங்கள் நிறைய இருக்கிறது. அதை தவிர்த்து வேறு ஒரு வாழ்க்கையில் என்னால்
நினைத்து கூட பார்க்க முடியாது என்று மிகவும் எமோஷனலாக பேசினார்.

லலிதா குமாரின் இந்த பேட்டி மக்கள் எல்லோரையும் மனமுருக செய்துள்ளது. பிரபல நடிகரான பிரகாஷ் ராஜ் தமிழ் சினிமாவில் குறிப்பாக வில்லனாக நடித்து மிகப்பெரிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

இவரது வில்லத்தனமான நடிப்பு எல்லோரையும் மிரட்டி எடுக்கும். ஸ்டைலிஷ் ஆன தோற்றத்தில் வில்லனாக நடித்து அசத்தி வந்த பிரகாஷ்ராஜ் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி மராத்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

குறிப்பாக தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த கில்லி திரைப்படத்தின் முத்துப்பாண்டி என்ற கேரக்டரில் நடித்து எல்லோரது கவனத்தை ஈர்த்தார்.

முத்துப்பாண்டிக்காகவே ரசிகர்கள் கூட்டமே ஒரு வில்லனுக்காக உருவாகினார்கள் என்றால் அது பிரகாஷ்ராஜ் ஆகத்தான் இருக்க முடியும்.

அண்மையில் கூட இப்படம் வெளியாகி பிரகாஷ்ராஜ் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

---- Advertisement ----