சமந்தாவின் புதிய காதலர் இவரா..? தீயாய் பரவும் புகைப்படம்.. நெட்டிசன்கள் கேள்வி..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா.

இவர் முதன்முதலில் தமிழில் மாஸ்கோவின் காவிரி என்ற திரைப்படத்தில் நடித்த ஹீரோயின் ஆக அறிமுகமானார் .

நடிகை சமந்தா:

அதை எடுத்து தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கி அங்கேயும் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார் .

தொடர்ந்து தமிழ், தெலுங்கு எப்படி இரு மொழிகளிலும் அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்து பிஸியான நடிகையாக வலம் வந்தபோது அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக சமந்தா இடத்தை பிடித்தார்.

---- Advertisement ----

இதனிடையே தெலுங்கில் பிரபலமான நட்சத்திர குடும்பத்தின் வாரிசும் இளம் நடிகரான நாகசசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக் ரீமேக் திரைப்படத்தில். ஹேமாயா சேஷாவே என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்கள்.

அந்த திரைப்படத்தில் நடித்த போதிலிருந்தே இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி அது காதிலாக மாறியது.

திருமணம், விவாகரத்து:

பின்னர் எட்டு வருட காதலுக்கு பிறகு பெற்றோர் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமாக இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற இவர்கள் திருமணத்தில் நட்சத்திர பிரபலங்கள் மற்றும் இருவீட்டார் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

திருமணம் ஆகி கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த சமந்தா நாக சைதன்யா ஜோடி திடீரென விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.

சமந்தா விவாகரத்துக்கு பிறகு ஹைதராபாத்தில் தனி வீடு எடுத்து செட்டில் ஆகிவிட்டார். இதனிடையே பாலிவுட் திரைப்படங்களிலிருந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க தொடர்ச்சியாக ஹிந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

அது மட்டும் இல்லாமல் அங்கு படு கவர்ச்சியான ரோல்களில் கூட முகம் சுளிக்காமல் நடித்து வருகிறார்.

இதனிடையே பாலிவுட்டின் பிரபல இளம் நடிகரான வருண் தவானுக்கு ஜோடியாக சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.

கவர்ச்சியான ரோல்கள் ஏற்று நடித்து வருகிறார் மேலும் பட குழுவினரோடு பார்ட்டி செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரல் ஆகியது.

சமந்தா பாலிவுட் நடிகர்களுக்கு அவர்களோடு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாக தென்னிந்திய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தது.

சமந்தாவின் புதிய காதலர் இவர் தான்:

இப்படியான நேரத்தில் சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு மீண்டும் வேறொருவருடன் காதலில் விழுந்திருப்பதாக செய்திகள் வெளியாகிறது.

ஆம் , அவரின் புதிய பாய் பிரண்டின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரல் ஆகி வருகிறது. அதாவது நடிகை சமந்தா பிரபல ஆடை வடிவமைப்பாளராக பிரீத்தம் ஜுகல்கருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

அதில், உன்னுடன் இருக்கும்போது உலகம் இனிமையான இடம் என்று குறிப்பிட்டு ஐ லவ் யூ என்று கூறியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இப்படி உருகியிருக்கிறாரே சமந்தா.. அப்போ நிச்சயம் இவரை தான் காதலிக்கிறார் போல என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்

அவ்வப்போது இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இருவரும் காதலில் இருப்பதாக வதந்தி செய்திகள் வெளியாகியது.

இந்த நிலையில் தற்போது சமந்தாவின் இந்த பதிவு உண்மையிலேயே அவர்கள் காதலிக்கிறார்களோ? என்ற என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

முன்னதாக சமந்தாவின் பல்வேறு போட்டோ ஷூட்களுக்கு பிரீத்தம் ஜூகல்கர் தான் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

---- Advertisement ----