23 வருஷம் ஆகுது.. இன்னும் நகுல் என்கிட்ட பேசுறது இல்ல.. கண் கலங்கிய தேவயாணி ராஜகுமாரன்..!

தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் என ஓர் அளவுக்கு பெயர் பெற்றவராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் ராஜகுமாரன்.

ஆனால், இவர் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே திரும்பி பார்க்க வைத்தது எப்போது என்றால் நடிகை தேவயானியை கரம் பிடித்த பிறகுதான்.

தேவயானி – ராஜகுமாரன் காதல்:

ஆம் தேவயானி கடந்த 2001 ஆம் ஆண்டில் காதலித்து அவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு தேவையானியின் குடும்பத்தார் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால்,

தேவயானி வீட்டை விட்டு வெளியேறி ரகசியமாக ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.

--Advertisement--

தேவயானி நடிப்பில் வெளிவந்த நீ வருவாய் என திரைப்படத்தில் இயக்குனர் விக்ரமனின் துணை இயக்குனராக ராஜகுமாரன் பணியாற்றினார்.

அப்போதிலிருந்து தேவயானி உடன் ஒரு நல்ல நட்பாக பழக்கம் ஏற்பட்டது. அந்த படத்திற்காக சிறந்த கதை ஆசிரியருக்கான தமிழக அரசு விருது ராஜகுமாரனுக்கு கொடுத்து கவுரவிக்கப்பட்டது.

அதன் பின்னர் ஒரு சில படங்களில் இவர்கள் சந்தித்துக் கொண்டார்கள். குறிப்பாக திருமதி தமிழ் திரைப்படத்தில் ராஜகுமாரன் தேவயானி இருவரும் சேர்ந்து நடித்திருந்தார்கள்.

ரகசிய திருமணம்:

அப்போது இவர்கள் இருவரும் காதலிக்க துவங்கி பின்னர் கடந்த 2001 ஆம் ஆண்டில் திருத்தணி முருகன் கோவிலில் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு பிரியங்கா, இனியா என இரண்டு குழந்தைகள் உள்ளனர் திருமணத்திற்கு பிறகு தேவயானி ஒரு சில திரைப்படங்களிலும் பல்வேறு சீரியல்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

தேவயானி தனக்கு சொந்தமான அந்தியூர் என்ற ஊரில் கிட்டத்தட்ட 10 ஏக்கர் நிலப்பரப்பில் பெரியதாக வீடு ஒன்றைக் கட்டி விவசாயம் செய்து மிகுந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

கிட்டத்தட்ட திருமணமாகி 23 வருடங்கள் ஆன பின்னரும் தேவயானி தம்பியான நகுல் தன்னுடன் பேசுவதே கிடையாது என ராஜகுமாரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் மன வருத்தத்தோடு பேசி இருக்கிறார்.

நான் தேவயானியை காதலித்து நான் திருமணம் செய்து கொண்டதை நகுல் இன்னும் தேச துரோக குற்றத்தில் சம்பந்தப்பட்டவனை போலவே என்னை பார்க்கிறார்.

இதுவரை என்னுடன் பேசினதே கிடையாது. தேவயானி வீட்டில் மாமியார் உள்ளிட்ட எல்லோரும் என்னை ஏற்றுக் கொண்டாலும் நகுல் மட்டும் என்னை இன்னும் ஏற்றுக்கொள்ளவே இல்லை.

அதுமட்டுமில்லாமல் தேவயானி குடும்பத்தில் அவரவர் வாழ்க்கையில் தனியாக பிரிந்து விட்டார்கள். தேவயானிக்கு இன்னொரு தம்பியும் இருக்கிறார்.

23 வருடங்களாக விரோதியாக பார்க்கும் நகுல்:

மையூர் என்ற ஒரு தம்பி தற்போது புனேவில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அவர் மட்டும் எப்போதாவது போனில் என்னிடம் பேசுவது உண்டு.

ஆனால், எனக்கு திருமணமாகி 23 வருடங்கள் ஆகிவிட்டது. இதுநாள் வரை நகுல் எங்கிட்ட முகத்தை பார்த்து பேசினதே கிடையாது.

அவரின் ஆழ்மனதிற்குள் இன்னும் நான் மிகப்பெரிய தவறு செய்து அவர் அக்காவை ஏதோ கொலை செய்தது போல என்னை பார்க்கிறார்.

அந்த அளவுக்கு எங்களின் காதல் திருமணம் அவரை பாதித்திருக்கிறது என பேட்டிகளில் கூறி மிகுந்த மன வருத்தத்தோடு பேசினார் ராஜகுமாரன்.