“இந்த நடிகர்களின் படங்களில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை இருக்காது..” – ஜோதிகா ஓப்பன் டாக்..!

சமீப காலமாக சமூக ஊடகங்களில் எந்த பக்கத்தை திருப்பினாலும் திரையுலகில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை பற்றிய பகிர்வுகள் கருத்துக்கள் அதிகளவு வெளி வந்து உள்ளது. இதனை அடுத்து 80, 90களில் கூட இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக கருத்துக்கள் வந்திருப்பது கடும் அதிர்ச்சியை தந்துள்ளது.

மேலும் தற்போது நடிக்கும் ஹீரோயினிகளுக்கும், ஹீரோக்களுக்கும் இடையே இருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் மற்றும் ஹீரோயினிகளின் விருப்பம் இல்லாமல் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி ஹார்ட் டாபிக்காக பேசப்படுகிறது.

ஏற்கனவே இயக்குனர் சீனு ராமசாமி, நடிகை மனிஷா யாதவை பாலியல் ரீதியாக துன்புறுத்திய விவகாரத்தை அடுத்து இவர் மீது குற்றம் சாட்டி பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி சீனு ராமசாமியின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தினார்.

மேலும் இந்த இயக்குனர் மனிஷா யாதவ் மட்டும் இல்லாமல் பிந்து மாதவியுடனும் தவறாக நடந்து கொண்டதாக பேச்சுக்கள் எழுந்தது. இது ஒரு பக்கம் சென்று கொண்டு இருக்க மறுபக்கம் விசித்ரா பாலகிருஷ்ணா பிரச்சனை பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகை ஜோதிகா அண்மை பேட்டி ஒன்றில் எந்த நடிகர்களோடு நடித்த கம்போர்டபிள் ஆக இருக்கும் என்பதை கூறியது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

--Advertisement--

மேலும் அவர் கூறி இருக்கும் நடிகர்களோடு சேர்ந்து நடிக்கும் போது அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையே இல்லை என்று அவர் வெளிப்படையாக கூறி இருக்கிறார். அந்த நடிகர்கள் அஜித், சூர்யா, மாதவன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோதிகா இவர்களோடு நடித்த போது மிகவும் பாதுகாப்பாக நடித்ததாக கூறியிருக்கிறார். எனவே தற்போது திரையுலகில் இவர்கள் மூன்று பேர் மட்டும் தான் உருப்படியான கேரக்டர் உள்ள நடிகர்களா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளார்கள்.