தலைமுடி முழுதும் நறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் தலைநகரம் பட நடிகை..

தலைமுடி முழுதும் நரைத்து ஆள் அடையாளம் தெரியாமல் தலைநகரம் பட நடிகை..

மனித வாழ்க்கையில் குழந்தை பருவம், இளமை பருவம், முதுமை பருவம் என மூன்று பருவங்கள்தான். இதில் மனித வாழ்க்கையில் கொண்டாட்ட பருவம் என்பது இளமை பருவம் மட்டுமே.

இளமை பருவத்தில்

இளமை பருவத்தில் உள்ள இந்த வயதில்தான் பள்ளி, கல்லூரிகளில் படிக்கிற வாய்ப்பும், காதலிக்கிற வாய்ப்பும், திருமணம் செய்கிற வாய்ப்பும், குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகிற வாய்ப்பும், புதிய தொழில், வேலை என அமையும் நிகழ்வுகளும் நடக்கின்றன. இந்த நிகழ்வுகள்தான் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கின்றன.

அதே வேளையில் அந்த இளமை கால தோற்றம் என்பது 20 முதல் 30 ஆண்டுகளுக்கு மட்டும்தான். அதன்பிறகு முதுமை வரத் துவங்கி விடும். 40 வயது கடந்து விட்டாலே, தலைமுடி, மீசை, தாடி எல்லாமே வெள்ளை படர துவங்கி விடும். பலருக்கு, 40 வயதிலேயே முடி கொட்டி விடும்.

அழகை மட்டுமே

சினிமாவில் அழகை மட்டுமே மூலதனமாக கொண்டு நடிக்க வருபவர்கள் பெண்கள். அவர்களின் தோற்றம் மட்டும் மாறிவிட்டால், எப்படிப்பட்ட அழகான நடிகையாக இருந்தாலும் அவர்களுக்கு மீண்டும் பட வாய்ப்புகள் அமையாது.

--Advertisement--

அதற்கு நிகழ்கால உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், அருந்ததி, வேட்டைக்காரன், சிங்கம், பாகுபலி போன்ற படங்களில் நடித்து, ரசிகர்களின் கனவுக்கன்னியாக வாழ்ந்த நடிகை அனுஷ்காவை சொல்லலாம்.

இதையும் படியுங்கள்: நடிகையின் அம்மாவை விரும்பிய தண்ணி நடிகர்.. ஒரே போன் காலில் இறங்கி வந்த 57 வயசு தேர் நடிகை..

ஜோதிர்மயி

அதே போல் மற்றொரு நடிகையாக ஜோதிர்மயி சொல்லலாம். சுந்தர் சி இயக்கிய தலைநகரம் படத்தில், திவ்யா கேரக்டரில் நடித்தவர் ஜோதிர்மயி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

முதல் திருமணம்

அறை எண் 305ல் கடவுள், நான் அவன் இல்லை. பெரியார், சபரி உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் கடந்த 2004ம் ஆண்டில் நிஷாந்த் குமார் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அவருடன் 6 ஆண்டுகள் குடும்பம் நடத்திய நிலையில், 2010ம் ஆண்டில் அவரை பிரிந்து விவாகரத்து பெற்றார்.

இதையும் படியுங்கள்: “அப்போ.. நீங்க எதை குடிப்பீங்க..” என்று கேட்ட நெட்டிசன்.. கஸ்தூரி கொடுத்த பதிலை பாருங்க..

அமல் நீரத்

அடுத்து மலையாளப்பட இயக்குநர் அமல் நீரத் என்பவரை 2015ம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்ட ஜோதிர்மயி, இப்போது மலையாள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளுடன் முன் தலையில் கூந்தல் இன்றி மொட்டை தலையுடன் காணப்பட்ட நடிகை ஜோதிர்மயி புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

நரைத்த நிலையில்…

இப்போது தலை முழுவதும் நரைத்த நிலையில் வெள்ளை நிற கூந்தலுடன் அவரது புகைப்படங்கள் வெளியாகி, ரசிகர்களை ஷாக் அடைய செய்திருக்கிறது.

தலைமுடி முழுதும் நரைத்து ஆள் அடையாளம் தெரியாமல் தலைநகரம் பட நடிகை ஜோதிர்மயி இப்படி ஆயிட்டாரே, என ரசிகர்கள் புலம்புகின்றனர்.