“ஆம் எனக்கு அந்த பழக்கம் உள்ளது..” – ஓப்பனாக ஒப்புக்கொண்ட காஜல் அகர்வால் – ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் காஜல் அகர்வால் ( Kajal Aggarwal ), நடிகர் சிரஞ்சீவியின் படத்தில் நடிப்பதற்காக, உதயநிதியின் படத்தை உதறி தள்ளிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை காஜல் அகர்வால் நடிப்பில், கடைசியாக ‘கோமாளி’ திரைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.இந்த படத்தை தொடர்ந்து, தமிழில் இந்தியன் 2 உட்பட மூன்று படங்களும், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழி படங்களும், இவரின் கை வசம் உள்ளன.

அதே போல் இவர் நடித்து முடித்துள்ள, ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தின் அணைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாகாமல் உள்ளது.

படத்தின் முக்கியமான காட்சிகளில் ஏகத்துக்கும் கவர்ச்சி இருப்பதால் அந்த காட்சியை வெட்ட வேண்டும் என தணிக்கை குழு கூறுகின்றது.ஆனால், அந்த காட்சிகளை எல்லாம் வெட்டினால் படம் , படமாக இருக்காது என இயக்குனரும், தயாரிப்பாளரும் முட்டி மோதி வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய கணவருடன் சரக்கு அடிக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு கொரோனா காலத்தில் என் கைகைள் பார்த்த ஆல்கஹாலை விட.. இதனுடைய அளவு குறைவு தான் என்று கேப்ஷனும் வைத்துள்ளார். இதன் மூலம், தனக்கு குடி பழக்கம் இருப்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

---- Advertisement ----

---- Advertisement ----