இவ என்னை இப்படி ஏமாத்துவானு நினைக்கல… கலா மாஸ்டர் புலம்பல்… என்ன மீனா கலா மாஸ்டரை ஏமாற்றிவிட்டாரா ?

ரகுராம் மாஸ்டரின்   உறவினரான கலா மாஸ்டர் தனது இருபத்தி ஐந்தாம் வயதுக்கு முன்பிருந்தே திரை துறை யில் நடன இயக்குனராக பணியாற்ற தொடங்கிவிட்டார். இவரது தங்கை பிருந்தாவும் நடன இயக்குனராக பல படங்களுக்கு நடனம் இயக்குநர் இருந்திருக்கிறார்.

சன் டிவியில் நிகழ்ந்த மானாட, மயிலாட நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்த கலா மாஸ்டர்  உலகளாவிய புகழை சம்பாதித்துக் கொண்டார். மேலும் இவர் தமிழ் படங்களுக்கு மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்னிந்திய மொழிகளோடு ஹிந்தி, அன்னிய மொழி படங்களுக்கும் நடன இயக்குனராக இருந்திருக்கிறார். இவர் ஏறத்தாழ 4000 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இவரும் நடிகை மீனாவும் உற்ற தோழர்களாக இருந்தது அனைவருக்கும் தெரிந்தது. மேலும் மீனாவின் கணவர் இறந்தபோது மீனாவுக்கு பக்கபலமாக இருந்து அத்தனை காரியங்களுக்கும் கை கொடுத்தவர் கலா மாஸ்டர் தான்.

கணவர் இறந்த துக்கத்தில் மீனா இருந்தபோது  அவளுக்கு ஆறுதல் கூறியதோடு அதிலிருந்து வெளியே வருவதற்கு நடிக்க தூண்டி  நீ வரவேண்டும் என வெளியே அழைத்து வந்த பெருமை கலா மாஸ்டரை தான் சாரும்.

இந்த நிலையில் இவர்கள் இருவருக்கிடையே என்ன நடந்தது? எதற்காக இப்படி புலம்பி தள்ளினார் தெரியுமா?.

---- Advertisement ----

காரணம் வேறு ஒன்றுமில்லை இது தான் தன்னுடைய திருமண நாளுக்கு மீனாவை தன் வீட்டுக்கு வரும்படி அழைத்து இருக்கிறார். ஆனால் மீனா தான் வெளியே  செல்ல வேண்டும். அதனால் வரமுடியாது என கூறிவிட்டார். இதனால் சற்று  மனவருத்தம் அடைந்த கலா மாஸ்டர் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.

ஆனால் அன்று மீனா அதிர்ச்சியளிக்கும் விதமாக கலா மாஸ்டரின் வீட்டிற்கு வந்த போது தான் தெரிந்தது அவரிடம் அவர் பொய் சொல்லிவிட்டு ஆச்சிரியம் தருவதற்காக இப்படி செய்திருக்கிறார். இதற்குத்தான் கலா மாஸ்டர் என்னை இப்படி ஏமாற்றி விட்டு விட்டு வீட்டுக்கு வீடு வருவாள் என்பது என்னால் நம்ப முடியாத ஒன்றாக இருந்தது என்று  கூறியிருக்கிறார்.

---- Advertisement ----