முத்தின கத்தரிக்கா.. தோழிக்கு சக்காளத்தியான கொடூரம்.. காவ்யா மாதவன் லீலைகள்..!

சினிமா நடிகர்கள், நடிகைகள் வாழ்வில் திருமணம் என்பது சினிமாவைப் போலவே அவர்கள் நிஜ வாழ்விலும் அது ஒருநாள் காட்சி போல் தான் வந்து செல்கிறது.

பெரும்பாலான நட்சத்திரங்கள், திருமண வாழ்க்கைக்கு பெரிய முக்கியத்துவம் தருவதில்லை. தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு என எந்த மொழியாக இருந்தாலும், அவர்களுக்கு நடிக்கும் சினிமாவை போலவே திருமண வாழ்க்கையும் மிக சாதாரணமான ஒரு நிகழ்வாக தான் அவர்களால் பார்க்கப்படுகிறது.

முரட்டு சிங்கிளாக..

அதனால் தான் பெரும்பாலான நடிகர், நடிகையர் திருமண வாழ்க்கை என்பது மிக விரைவில் முடிவுக்கு வந்து விடுகிறது. உதாரணமாக தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசன், மூன்று திருமணங்களை செய்துவிட்டு, மனைவிகளை பிரிந்து இப்போது முரட்டு சிங்கிளாக தனிமையில் இருக்கிறார்.

அதேபோல் நடிகர் ராமராஜன், நளினியை பிரிந்து வாழ்கிறார். இயக்குனர் பார்த்திபன் மனைவி சீதாவை பிரிந்து வாழ்கிறார்.

ஆனால், ஒரு சிலர் முதல் மனைவியை பிரிந்த பிறகு, இரண்டாவது மனைவி மூன்றாவது மனைவி என்று போய் விடுகின்றனர். விஜயகுமார் – மஞ்சுளா தம்பதி மகள் வனிதா விஜயகுமார், மூன்று திருமணங்களுக்கு பிறகு இப்போது நான்காவது திருமணத்திற்கு தயாராகி வருகிறார்.

---- Advertisement ----

திருமண வாழ்க்கை என்பது…

நடிகை ராதிகாவுக்கு, சரத்குமார் மூன்றாவது கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நடிகர் சரத்குமாருக்கு, ராதிகா இரண்டாவது மனைவி. அவரது மகள் வரலட்சுமி சரத்குமாரும், இப்போது திருமணம் செய்யப் போகும் நிக்கோலாய் சச்தேவ், அவருக்கு இரண்டாவது மனைவியாக போகிறார்.

அவருக்கு ஏற்கனவே 16 ஆண்டுகளுக்கு முன்பே திருமணமாகி, அவருக்கு 15 வயதில் மகள் இருக்கிறார்.

இப்படி நடிகர், நடிகை திருமண வாழ்க்கை என்பது இவ்வளவு அலட்சியப்போக்கான தன்மையில் இருந்து வருகிறது.

விவாகரத்து

இப்போதும் கூட நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தனது கணவர் தனுஷை பிரிய விவாகரத்து கோரி இருக்கிறார். ஒருவேளை விவாகரத்துக்கு பிறகு, அவரது தங்கை செளந்தர்யாவை போல அவரும் இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாம். தனுஷும், அண்ணன் செல்வராகவனை போலவே இன்னொரு திருமணம் செய்து கொள்ள வாய்ப்பும் இருக்கிறது.

நடிகை சமந்தா நாகசைதன்யாவை பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். இது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இரண்டாவது திருமணம், மூன்றாவது திருமணம் என்பது மலையாள சினிமாவிலும் மிக மிக சகஜமாக நடந்து வருகிறது.

பிரபல மலையாள நடிகர் திலீப், ஏற்கனவே நடிகை மஞ்சு வாரியரை 16 வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்டார்.

காவ்யா மாதவன்

மஞ்சுவாரியரின் நெருங்கிய தோழியான காவ்யா மாதவன்.. தோழியின் கணவர் மீது ஆசை கொண்டு திலீப்பை காதலித்து வந்தார். மப்பும் மந்தாரமுமாக இருந்த காவ்யா மாதவன் வாசித்த மகுடிக்கு பாம்பாய் அடங்கினார் திலிப்.

மஞ்சு வாரியருக்கு மற்றொரு தோழியான நடிகை பாவனா மூலம் இந்த விஷயம் தெரிந்து விவாகரத்து செய்த பிறகு, நிரந்தமாக மகுடி வாசிக்க திலீப்பை திருமணம் செய்து கொண்டார் காவ்யா மாதவன். திலிப்-காவ்யா மாதவனின் வயது வித்தியாசம் 17 ஆகும்.

17 வயது வித்யாசம்

இப்படி 16 வயது, 17 வயது வித்யாசம் உள்ள திலீப்புக்கு இப்படி அழகழகான பெண்கள் மனைவியாக வாய்க்கின்றனர் என்பது மலையாள சினிமா ரசிகர்களுக்கு பயங்கர கடுப்பை ஏற்படுத்தி வருகிறது.

முத்தின கத்திரிக்காய்

முத்தின கத்தரிக்காயாக இருந்தாலும், தோழிக்கு சக்காளத்தியான கொடூரம். மஞ்சுவாரியாரை காலி செய்த காவ்யா மாதவன் லீலைகளை அறிந்த ரசிகர்கள், அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர்.

 

---- Advertisement ----