“சமையலறையில் இந்த பொருட்கள் இருக்கா..!” – அப்ப புற்றுநோய் கட்டாயமா வருமா..!

இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் என்பது சிறுவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு காரணம் அவர்கள் உண்ணும் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டிருக்க கூடிய மாற்றம் மட்டுமல்லாமல் அதிகப்படியான ரசாயனம் கலந்த துரித உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வது என்று கூறலாம்.

அதுமட்டுமல்லாமல் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களின் மூலம் குறிப்பாக சமையலறையில் பயன்படுத்தும் சில பொருட்களின் மூலம் உங்களுக்குப் புற்றுநோய் மட்டுமல்லாமல் இதய நோய், உடல் பருமன், நீரழிவு, தசை வலிமை இழப்பு போன்ற எண்ணற்ற நோய்களுக்கு ஆளாகிறோம்.

அப்படி நாம் சமையல் அறையில் பயன்படுத்தக்கூடிய  பொருட்கள் என்னென்ன அந்த பொருட்களால் ஏற்படக்கூடிய புற்றுநோய் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

சமையலறையில் பயன்படுத்தும் பொருட்களால் ஏற்படுகின்ற புற்றுநோய்

சமையல் அறையில் நாம் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்- களில் இருக்கும் வேதிப்பொருட்கள் பிஸ்பெனால்,பித்தலேட்டு உடலுக்கு ஆபத்தை தோற்றுவிக்கிறது.

 இந்த வேதிப்பொருட்கள் அதிகளவு கொள்கலன்கள், சமையல் பாத்திரங்கள், பழைய தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றில் உள்ளது. இதனை நாம் பயன்படுத்தும் போதும் அதனை சுத்தப்படுத்த பயன்படுத்தும் தீய வேதிப்பொருட்கள் கலந்து உள்ளதால் நமக்கு புற்றுநோய் ஏற்படுகிறது.

--Advertisement--

எனவே நீங்கள் உங்கள் சமையலறைகளில் அதிக அளவு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக கண்ணாடி, சிலிக்கான் போன்ற பொருட்களை பயன்படுத்தலாம்.

உணவை அலுமினிய பாத்திரங்களில் சமைக்கும் போது சூடு படுத்த நீங்கள் அலுமினிய பாத்திரத்தை பயன்படுத்தாதீர்கள். மேலும் பிளாஸ்டிக் பைகளில் உணவுப் பொருட்களை போட்டு சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள் அல்லது அந்த பிளாஸ்டிக் பைகளில் உணவுகளை பொதிந்து செல்வதையும் மறந்து விடுங்கள்.

 ஏனெனில் உணவில் இருக்கக்கூடிய மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற முக்கிய தாதுக்களை  உறுஞ்சுவதை  தவிர்ப்பதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கு செரிமான பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.மேலும் ஆஸ்டியோபோரோசிஸ்டின் அபாயத்தை  ஏற்படுத்துகிறது.

நவீன காலத்தில் பாத்திரங்களாக திகழும் நான்ஸ்டிக் பாத்திரங்களில் பாலி டெட்ரா புளோரோ எத்திலின் என்ற டெஃப்ளான் கலவையானது பூசப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான ரசாயனம் இதன் மூலம் எளிதில் நமக்கு புற்றுநோய் ஏற்படும். இந்த பூச்சானது கீறல் விழாத வரை எந்த பிரச்சனையும் இல்லை. கீறல் விழுந்து விட்டால் கட்டாயம் புற்றுநோயின் தாக்கத்திற்கு உள்ளீர்கள்.