மார்பு பகுதியில் பண்ற வேலையா இது..? கிருத்திகாவின் போட்டோவை பார்த்து விளாசும் ரசிகர்கள்..!

டிவி சீரியல் வில்லி நடிகைகளில் மிக முக்கியமாக ரசிகர்களால் கவனிக்கப்படுபவர் கிருத்திகா அண்ணாமலை. மெட்டி ஒலி, பாண்டவர் இல்லம் போன்ற சீரியல்களில் இவரது நடிப்பு பார்வையாளர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இவர் மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டு சிறப்பான நடனமாடி பலத்த பாராட்டை பெற்றவர்.

சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பே ஆண்டான் அடிமை, பார்வை ஒன்றே போதுமே ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஒரு படத்தில் சத்யராஜூக்கும், மற்றொரு படத்தில் குணாலுக்கும் தங்கையாக நடித்துள்ளார். ஆனால் துவக்கத்தில் சினிமாவில் நடிக்க விருப்பமில்லை. அதற்கு முக்கிய காரணம், பெண்கள் பள்ளியில் படித்த இவருக்கு, ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆண்கள் கூட்டமாக இருப்பது அலர்ஜியை தந்திருக்கிறது.

பெ்ற்றோர் ஏற்பாடு செய்த திருமணம்தான் என்றாலும், 6 ஆண்டுகளுக்கு மேல் திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. ஒரு குழந்தை பெற்ற நிலையில், 2 மாதங்களில் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டவர் கிருத்திகா. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், கணவர் வருமானமின்றி குடும்பத்தில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களே, கிருத்திகாவும் அவரது கணவரும் பிரிய முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.

கணவரை பிரிந்த நிலையில் தனது சிங்கிள் மதருடன் வாழ்ந்துவரும் கிருத்திகாவுக்கு, நிறைய பட வாய்ப்புகள் வந்தாலும் அதிலும் வில்லி கேரக்டர்தான் அவருக்கு சொல்லப்படுவதால், அது வேண்டாம் என டிவி சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது முரட்டு சிங்கிளாக இருக்கும் கிருத்திகா, ஒரு ஓட்டலில் உள்ள நீச்சல் குளத்தின் முன், கருப்பு நிற கவுனில் ஒய்யாரமாக அமர்ந்து போஸ் தந்திருக்கிறார். அதில் பளிச்சிடும் மார்பு பகுதியில் டாட்டூஸ் வரையப்பட்டுள்ளது. இவங்களுக்கு டாட்டூஸ் வரைய வேற இடமே கிடைக்கலையா என்று அந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், கலாய்த்து வருகின்றனர்.