குஷ்பு… இல்ல அப்படின்னா… இந்த நடிகை தான் என்னுடைய சாய்ஸ்… ஓப்பனாக கூறிய சுந்தர் சி..!

இயக்குனர் சுந்தர் சி பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர். இவர் ரஜினியை வைத்து அருணாச்சலம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் பெரும் பெயரை பெற்றார்.

 இதன் மூலம் இவருக்கு அடுத்தடுத்து படங்கள் வந்தது. எல்லா படங்களையும் மிகவும் இலகுவான முறையில் வெற்றி படங்களாக அமைத்துக் கொடுத்த பெருமை இவரை சாரும். இவர் படங்களில் சிறந்த கதை அம்சத்தோடு காமெடியும் நிறைந்திருப்பது தான் இவரின் படங்கள் வெற்றி  பெற காரணம் எனக்கூறலாம்.

 இவர் செய்தியாளர்களிடம் பேசும் போது இவருக்கும் இவரது மனைவிக்கும் நடந்த ஒரு உரையாடல் பற்றி கூறினார். இது திருமணம் ஆன பின் மனைவி எப்போதுமே நீங்கள் சௌந்தர்யாவை வைத்து படங்களை இயக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டாராம். அப்போது அவர் தனது அருணாச்சலம் படத்தில் நடிகை சௌந்தர்யா நடித்த விளக்கமாக கூறியிருக்கிறார்.

 மேலும் சௌந்தர்யா மிகவும் அழகாக இருந்ததோடு நடிப்பிலும் தனது திறமையை அழகாக வெளிப்படுத்த கூடிய அற்புதமான நடிகை என்று சுந்தர் சி விளக்கியிருக்கிறார்.

 இத்தோடு நிறுத்தி விடாமல் சுந்தர் சி மேலும் ஒரு படி சென்று குஷ்பூ தனது வாழ்வில் வராமல் இருந்திருந்தால் நிச்சயமாக சௌந்தர்யாவிடம் அவர் ப்ரொபோஸ் செய்திருப்பார் என்று கூறினாராம்.

---- Advertisement ----

 அதைத் தொடர்ந்து அதற்கு பதிலடி தரக்கூடிய விதத்தில் நடிகை குஷ்பு தனது கணவராகிய சுந்தர் சியிடம் அப்படி நீங்கள் சௌந்தர்யாவை ப்ரொபோஸ் செய்திருந்தால்… அவரும் ஏற்றுக் கொண்டிருந்தால் இப்போது அவர் உயிருடன் இருப்பார் என்று  அருமையான பதிலை தந்திருக்கிறார்.

 மேலும் அவ்வளவு எளிதாக நீங்கள் சௌந்தர்யாவை புரபோஸ் செய்ய முடிந்திருக்க முடியாது. ஏனென்றால் சௌந்தர்யாவுக்கு துணையாக எப்போதும் அவரது அண்ணன் கூடவே இருப்பார் என்பதை மறந்து விட்டீர்களா?  என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார்.

 குஷ்பு கூறியதில் உண்மை உள்ளது என்பதை உணர்ந்து கொண்ட சுந்தர் சி அவர் எதிர்பாராதவிதமாக சௌந்தர்யா விபத்தில் இறந்தது மிகவும் வேதனையாக உள்ளது என்று அவரது பேட்டியில் கூறியிருக்கிறார்.

---- Advertisement ----