“குடை மறைவில்.. ஜாக்கெட்ல இருந்து அதை எடுத்து..” அவர் வரதுக்குள்ள முடிச்சுவேன்.. குஷ்பூ ஓப்பன் டாக்..!

90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை குஷ்பூ.

கொழுக் மொழுக் லுக்கில் பார்க்கவே நல்ல தோற்றத்தோடு நல்ல உடல் பாவனையை கொண்டு,

அழகான முக ஜாடை என தமிழ் சினிமா ரசிகர்களை கவரும் குடும்ப கதாபாத்திரம் மற்றும் மாடர்ன் கதாபாத்திரம் என இரண்டுக்குமே பக்காவாக பொருந்தும் நடிகையாக,

நடிகை குஷ்பு:

அன்றைய காலத்தில் பார்க்கப்பட்டார். முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு வருஷம் 16 என்ற திரைப்படத்தில் மிகவும் இளம் வயதிலேயே,

--Advertisement--

கதாநாயகியாக அறிமுகமாகி புகழ் பெற்றார் நடிகை குஷ்பு. குறிப்பாக 90களில் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை,

இவர் பல்வேறு சூப்பர் திரைப்படங்களில் நடித்து டாப் நடிகையாக வலம் வந்து கொண்டே இருந்தார்.

தமிழை தாண்டி கன்னடம், மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்து அங்கும் பிரபல நடிகையாகவே பார்க்கப்பட்டு வந்தார்.

நடிகை என்பதையும் தாண்டி நிகழ்ச்சி தொகுப்பாளினி, சீரியல் நடிகை, தயாரிப்பாளர் இப்படி பல முகம் கொண்டு சிறந்து விளங்கி வந்தார் நடிகை குஷ்பூ.

வெற்றி திரைப்படங்கள்:

பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கும் குஷ்பூ குறிப்பாக ரிக்சா மாமா, சின்னதம்பி, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, நாட்டாமை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து,

மாபெரும் வெற்றி பெற்ற படங்களாக பார்க்கப்பட்டது. அதன் பிறகு ஒரு சில படங்களில் குணச்சித்திர ரோல்களிலும் நடித்து புகழ்பெற்று வந்தார்.

இதனிடையே பிரபல இயக்குனரான சுந்தர்சியை இவர் காதலுக்கு திருமணம் செய்து கொண்டார். 2000 ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்வதற்கு முன்னர்,

நடிகை குஷ்பூ நடிகர் பிரபுவே காதலித்து வந்தது ஊர் அறிந்த ஒன்றுதான். ஆனால் அவரது காதலுக்கு சிவாஜி கணேசன் எதிர்ப்பு தெரிவித்ததால் குஷ்பூ பிரபுவை விட்டு பிரிந்து விட்டார்.

ஆனால் இன்றளவும் அவர்கள் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்கள். அதை இருவருமே வெளிப்படையாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

நிறைவேறாமல் போன காதல்:

நாங்கள் காதலித்து உண்மை தான் எனவும் நடிகை குஷ்பூ பல பேட்டிகளில் கூறியுள்ளார். இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் செய்த அலப்பறை குறித்தும் சின்ன சின்ன சேட்டைகள் குறித்தும் குஷ்பு மனம் திறந்து பேசியுள்ளார்.

அதாவது, சினிமாவில் அறிமுகமான புதிதில் எங்கு படபிடிப்பு இருந்தாலும் அங்கு என்னுடைய தந்தை வந்து விடுவார். என்னை அதிகமாக சாப்பிடவே விட மாட்டார்.

அந்த நேரத்தில் நடிகர் அர்ஜுன் அவர் அணிந்துள்ள ஜாக்கெட்டிற்குள் பிஸ்கட் சிப்ஸ் எல்லாம் வச்சிகிட்டு என்னை தனியாக அழைத்து,

ஜாக்கெட்ல இருந்து அத எடுத்து கொடுத்த அர்ஜுன்:

அவர் ஜாக்கெட்டுக்குள் வைத்திருக்கக்கூடிய அனைத்தையும் என்னிடம் காட்டுவார் இந்தா எடுத்துக்கோ.. அப்பா வரதுக்குள் சீக்கிரம் சீக்கிரமாக இதை சாப்பிட்டு விட்டு சென்றுவிடு எனக் கூறுவார்.

நானும் அப்பா வரதுக்குள் சிப்ஸ் பிஸ்கட் அனைத்தையும் முடித்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் ஓய் அமர்ந்து கொள்வேன் என பேசி இருக்கிறார் நடிகை குஷ்பூ.