கல்யாணம் முடிந்து ரெண்டு வாரம் தான் ஆகுது..! – கணவரிடம் செருப்பை காட்டிய VJ மகாலட்சுமி..!

 திருமணமாகி ஒரு மாதம் முடிந்த நிலையிலும் இன்னும் ரிண்டிங் ஆக பேசப்படக்கூடிய ஜோடிகளின் வரிசையில் மகாலட்சுமி ரவீந்தர் ஜோடி இருக்கிறார்கள். திருமணத்திற்குப் பின்னால் பல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்கள் உருவத்தை வைத்து கேலி செய்தவர்கள் அனைவருக்கும் மிகவும் அருமையான முறையில் சாமர்த்தியமான பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.

 இந்த வரிசையில் தற்போது இவர்களை பேட்டி எடுக்க விஜய் டிவிக்கு அழைத்திருக்கிறார்கள் ஏற்கனவே விஜய் டிவியில் சீரியலில் ஒன்றாக நடித்த நடிகர்கள் ஒவ்வொருவரும் திருமணம் செய்து கொண்டிருப்பது அனைவருக்குமே தெரியும்.

 இதற்கு உதாரணமாக சரவணன் மீனாட்சியில் நடித்த செந்தில், ஸ்ரீஜா ராஜா ராணி தொடரில் நடித்த சஞ்சீவ் ,ஆலியா மானசா போன்ற ஜோடிகளை கூறலாம். இந்த வரிசையில் மிக விரைவில் இனிய போகக்கூடிய ஜோடியான பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்ட அமீர் மற்றும் பவானியை நாம் இணைத்துக் கொள்ள வேண்டும்.

இதனையடுத்து தனது டிஆர்பி ரேட்டை உயர்த்திக்கொள்ள  இந்த ஜோடியை அழைத்து அவர்களுக்கு கொடுத்த டாஸ்க்  அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

இந்த  டாஸ்க்கில் ஒருவரைப் பற்றி ஒருவர் புரிந்து கொண்டிருக்கிறார்களா என்பதை கண்டறிவது மிக முக்கியமான அம்சம் இதற்காக ஒருவர் சொல்லும் பதில் இருவரிடையே ஒரே மாதிரியாக இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

---- Advertisement ----

இதற்காக ரவீந்தர் மற்றும் மஹாலக்ஷ்மியிடம் ஆண் மற்றும் பெண் அணியக்கூடிய செருப்புகள் கொடுக்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதில் மகாலட்சுமி என்றால் பெண் செருப்பையும் ரவீந்தர் என்றால் ஆண் செருப்பையும் காட்டவேண்டும் என்று கூறியிருந்தார்கள்.

இதனை அடுத்து ஒரு பிரபல தயாரிப்பாளரின் கைகளில் செருப்பை கொடுத்து கேவலப் படுத்தியுள்ளது எனினும் அதையும் அவர் பெரிதாக எண்ணாமல் அந்த டாஸ்க் விளையாடி இருப்பது அவரின் பெருந்தன்மையைப் பெரிய அளவில் எடுத்துக்காட்டி உள்ளதாக ரசிகர்கள் பலர் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து டிஆர்பி ரேட்டை அதிகரிப்பதற்காக மனசாட்சி இல்லாமல் இதுபோன்ற தாக்குதல் இவ்வாறு கையாளுவது மிகவும் தவறானது இது பலரின் மத்தியில் பல நெகட்டிவ் சிந்தனைகளைத் தூண்டிவிடும் என்று கூறியிருக்கிறார்கள்.

---- Advertisement ----