“அந்த உணர்வை என்னால் கண்ட்ரோல் பண்ணவே முடியாது..” – ஓப்பனாக கூறிய மாளவிகா மோகனன்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் நடிகை மாளவிகா மோகனன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மட்டுமில்லாமல் சினிமா சம்பந்தப்பட்ட விழாக்கள் விருது விழாக்கள் அழகிப் போட்டிகள் போன்றவற்றில் கலந்து கொள்ளும் மாளவிகா மோகனன் தான் செல்லும் இடங்களில் கலை நயம்மிக்க கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு தோன்றி மீடியாக்களின் கேமராக்களை தன்பக்கம் திருப்புவதில் கில்லாடி.

மாளவிகா மோகனன் ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார் என்றாலே காந்தத்தை கண்ட இரும்பு போல மீடியாவின் கேமராக்கள் மாளவிகாவை நோக்கி சென்று விடும். அந்த அளவுக்கு மீடியாவை எப்படி கையாள வேண்டும் ரசிகர்களை எப்படி ஈர்க்க வேண்டும் என்ற மந்திரத்தை அறிந்து வைத்திருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன்.

தமிழில் இவர் நடித்த மூன்று படங்களுமே முன்னணி ஹீரோக்களின் படங்கள். தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஹீரோயினாக கமிட் ஆகி வரும் இவர் நிச்சயமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் உடற்பயிற்சி மீதான தன்னுடைய ஆர்வத்தை கூறி ரசிகர்களுக்கும் உடற்பயிற்சி செய்வதன் குறித்த முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியுள்ளார் நடிகை மாளவிகா மோகனன். பல வேலைகள் நேரமின்மை என இருந்தாலும் உடற்பயிற்சி செய்வதற்கு உண்டான தனியாக நேரத்தை ஒதுக்கி தன்னுடைய தங்களுடைய உடலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை ஆணித்தரமாக கூறுகிறார் நடிகை மாளவிகா மோகனன்.

---- Advertisement ----

நடிகை மாளவிகா மோகனன் என்னால் கண்ட்ரோல் பண்ண முடியாத சில விஷயங்கள் என்று சில விஷயங்களை கூறியிருக்கிறார். அதில் முக்கியமாக காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற உணர்வை என்னால் கண்ட்ரோல் பண்ணவே முடியாது. எந்த வேலை இருந்தாலும் உடற்பயிற்சி செய்து விடுவதை நான் கண்டிப்பாக செய்து விடுவேன் என்று கூறி இருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன்.

---- Advertisement ----