நடிகர் மாரிமுத்து மறைவு சின்னத்திரை ரசிகர்கள் வெள்ளித்திரை ரசிகர்கள் என அனைவருக்கும் கடுமையான சோகத்தை கொடுத்திருக்கிறது.
இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு நடிகர் மாரிமுத்து கலந்து கொண்ட விவாத நிகழ்ச்சி ஒன்றில் ஜோதிடர்களுக்கும் ஜோதிடத்தை நம்பாதவர்களுக்கும் இடையேயான விவாத நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது.
அதில் ஜோதிடத்தை நம்பாதவர்கள் என்ற பக்கத்தில் நடிகர் மாரிமுத்து அமர்ந்திருக்கிறார். அப்போது மாரிமுத்துவின் ஜாதகமே இல்லாமல் உங்களுக்கு வயிற்றுக்கு மேல் பிரச்சினை இருக்கிறது நீங்கள் வேண்டுமானால் பரிசோதனை செய்து பாருங்கள்.
நான் சொல்வது உண்மை என உங்களுக்கு தெரியும். நான் சொல்வது நடந்தால் 2 கோடி ரூபாய் நீங்கள் எங்களுக்கு கொடுங்கள்.
நான் சொல்லுவது நடக்கவில்லை என்றால் நீங்கள் எனக்கு இரண்டு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் ஒப்பந்தம் செய்து கொள்ளலாமா..? என்று கேட்கிறார்.
அதற்கு பதில் அளித்த நடிகைகள் மாரிமுத்து நான் கடவுளே நம்பாதவன்… உக்காருயா.. யார் நீயெல்லாம் என்று உதாசீனப்படுத்தி இருக்கிறார்.
இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மட்டுமல்லாமல் யூட்யூப், எக்ஸ், பேஸ்புக் என அனைத்து தளங்களிலும் பேசுபொருளாகவும் மாறி வருகிறது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.