எளிதாக பட்டாணி பிரியாணி செய்வது எப்படி

 

பேச்சுலர்கள் வேலை பளு மிகுந்த நாட்களில் எளிதாக , குறைந்த நேரத்தில் , குறைவான மூலப்பொருள் கொண்டு செய்து முடிக்க கூடிய , அனைவரும் விரும்பி சாப்பிடும் பிரியாணி வகைகளில் ஒன்றான இந்த உணவை சமைக்கும் முறை இந்த பதிவில் பார்ப்போம் .அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி – 1 கப் பட்டாணி – 1/2 கப் வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) கெட்டியான தேங்காய் பால் – 1 கப் தண்ணீர் – 1/2 கப் உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு:

புதினா – 1/2 கப் கரம் மசாலா – 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 3 வரமிளகாய் – 2 துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன் இஞ்சி – 1/2 இன்ச் பூண்டு – 4 பற்கள்

தாளிப்பதற்கு:

நெய் – 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – 1 டீஸ்பூன் பிரியாணி இலை – 1 பட்டை – 1/4 இன்ச் கிராம்பு – 2 ஏலக்காய் – 1

---- Advertisement ----

செய்முறை:

முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பாசுமதி அரிசியை நீரில் நன்கு கழுவி பின் சுத்தமான நீரில் 15 நிமிடம் ஊற வைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு அடி கனமான குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து கொள்ளவும், பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் பட்டாணி, (விருப்பம் உள்ளவர்கள் நறுக்கிய கேரட் மற்றும் பீன்ஸ் சேர்த்து கொள்ளலாம்) தேவையான அளவு உப்பு மற்றும் பாசுமதி அரிசி சேர்த்து நன்கு கிளறி, தேங்காய் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி, மீண்டும் கிளறி, தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது குக்கரை மூடி விட்டு 3 விசில் வந்த உடன் இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்தால் தேங்காய் பால் பட்டாணி பிரியாணி ரெடி , சுவைத்து மகிழுங்கள் !!! சூடான நிலையில் புதினா மற்றும் கொத்தமல்லி இலைகள் தூவினால் இன்னும் மணம் கூடும் !!

---- Advertisement ----