“என் நண்பர்களே என்னை அதுக்கு கூப்பிட்டாங்க..” – கணவர் மறைவுக்கு பிறகு போட்டு உடைத்த மீனா..!

90களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை மீனா சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது. இத்தனை நாட்களாக மறைத்து வைத்திருந்த விஷயத்தை தற்போது பொதுவெளியில் போட்டு உடைத்திருக்கிறார் நடிகை மீனா.

தன்னுடைய கணவரை சமீபத்தியல் இழந்தார் நடிகை மீனா என்பது பலருக்கும் தெரிந்திருக்கும் எனது நாட்களாக நுரையீரல் பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வந்த அவருடைய கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது நடிகை மீனாவை மட்டும் இல்லாமல் அவருடைய ரசிகர்களையும் சோக அலையில் ஆழ்த்தியது. தற்போது அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் நடிகை மீனா குறித்து அவ்வப்போது வதந்திகளும் கிசு கிசுக்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

குறிப்பாக இவருடைய இரண்டாவது திருமணம் யாருடன் என்பதுதான் சமீபத்தில் ஹாட் ட்ரெண்டிங்காக, ஹாட் டாக்காக இணைய வட்டாரத்தில் பார்க்க முடிகிறது. இதற்கு காரணம், நடிகை மீனாவும் நடிகர் தனுஷும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் இணையத்தில் வைரலானது தான்.

நடிகை மீனாவின் வயது என்ன..? நடிகர் தனுஷின் வயது என்ன..? ரஜினிகாந்துக்கு ஜோடி போட்டு நடித்த ஒரு நடிகையுடன் எப்படி நடிகர் தனுஷ் திருமணம் செய்து கொள்வார்..? என்றெல்லாம் ஒருபக்கம் விவாதங்கள் பறந்து கொண்டிருந்தது.

---- Advertisement ----

மறுபக்கம், இதெல்லாம் உண்மைக்கு புறமான தகவல். என்னுடைய கணவர் இன்று இல்லை என்ற விஷயத்தையே என்னால் நம்ப முடியவில்லை. அதற்குள் இரண்டாவது திருமணம் பற்றி எல்லாம் எப்படி என்னால் யோசிக்க முடியும்.

எப்படி இப்படியான செய்திகள் எல்லாம் இணையவளியில் பரவுகிறது என தெரியவில்லை என்று தன்னுடைய வேதனையை பதிவு செய்திருந்தார் மீனா. மறுபக்கம் நடிகை மீனாவின் குடும்பத்தாரும் அவருடைய நண்பர்களும் விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது தான் உனக்கும் குழந்தைக்கும் எதிர்காலத்திற்கு பாதுகாப்பாக இருக்கும் என்று தங்களுடைய கருத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

ஆனால் நடிகை மீனா அதற்கு செவி சாய்க்கவில்லை. என்றும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இது ஒரு பக்கம் இருந்தாலும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை மீனா சினிமாவில் அறிமுகமான பொழுதில் எனக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருந்தார்கள்.

அப்போதுதான் பார்ட்டி பப் கலாச்சாரம் எல்லாம் வளர்ந்து கொண்டிருந்த நேரம். என்னையும் இரவு நேரத்தில் பாட்டி பப் என என்னுடைய நண்பர்களே அழைத்து இருக்கிறார்கள். நானும் செல்கிறேன் என்று என்னுடைய அம்மாவிடம் கூறுவேன்.

என் அம்மா அப்படி எல்லாம் போகக்கூடாது. உன்னுடைய வேலை என்னவோ அதை மட்டும் செய்ய வேண்டும் என கண்டித்தார். அப்போது என் அம்மாவின் பேச்சு எனக்கு கசப்பாக இருந்தது.

ஆனால் தற்போது ஒரு மகளின் தாயாக அந்த என்னுடைய அம்மாவின் கண்டிப்புக்கு காரணம் என்ன என்று உணர்ந்து கொள்ள முடிகிறது. ஒருவேளை அப்படியான விஷயங்களில் நான் மூழ்கி இருந்தால் என்னுடைய வாழ்க்கையை திசை மாறிப் போய் இருக்க வாய்ப்பு அமைத்திருக்கும்.

அப்படியான விஷயங்களில் மூழ்கியதால், சினிமா வாழ்க்கை மட்டுமில்லாமல் தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டையும் இழந்த பல நடிகைகளை எனக்கு தெரியும். எனவே பெற்றோரின் பேச்சை கேட்டு நடப்பது தான் ஒவ்வொருவருக்கும் அவருடைய வாழ்க்கைக்கு நன்மை பயக்கும் விஷயமாக இருக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன் என பதிவு செய்திருக்கிறார் நடிகை மீனா.

நடிகை மீனாவின் இந்த பக்குவப்பட்ட பேச்சு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. இவருடைய இந்த பேச்சுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளும் குவிந்து வருகின்றது.

---- Advertisement ----