நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனை தொடர்ந்து அவருடைய இல்லத்திற்கு நடமாடும் தடயவியல் ஆய்வகத்துடன் நிபுணர்கள் வருகை தந்து அவருடைய அவர் தற்கொலை செய்து கொண்ட அறையை சோதனை செய்து வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க நேற்று பள்ளி விடுமுறை என்றாலும் கூட விஜய் ஆண்டனியின் மகள் மீரா வீட்டை விட்டு வெளியே சென்று இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி அதிர்வலைகளை கிளப்பி இருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து விசாரித்த போது நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற மீரா தன்னுடைய தோழிகளை சந்தித்தார் என்று கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து நேற்று யார் யாரை சந்தித்தார் லாரா என்ற விசாரணையை போலீசார் முடுக்கி விட்டனர்.
மேலும்இவர் கடந்த ஒரு ஆண்டு காலமாக மன அழுத்த நோய்க்கு ஆளாகி அதற்காக சிகிச்சை பெற்று வந்தார் என்றாலும் கூட நேற்று ஏதேனும் அவருடைய மனதை பாதிக்கும் வகையிலான சம்பவங்கள் ஏதேனும் நடந்ததா..? அவரை யாரேனும் தற்கொலைக்கு தூண்டும் விதமான செயல்களை செய்தார்களா..? உள்ளிட்ட கோணத்தில் போலீசார் தீவிரமான விசாரணையை மேற்கொண்டு இருக்கின்றனர்.
பிரேத பரிசோதனை முடிந்து தற்போது விஜய் ஆண்டனி இல்லத்திற்கு அவருடைய மகளின் பிரேதம் எடுத்து வரப்பட்டிருக்கிறது. இன்று மாலை கீழ்பாக்கம் மயானத்தில் அவருடைய உடல் கிறிஸ்தவ முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.