கீழே பெரிய கேப்.. விலைமாது கட்டில் கீழே பார்த்த விஷயம்.. மிருணாள் தாகூர் உடைத்த ரகசியம்..!

2018 – ஆம் ஆண்டு தாகூர் லவ் சோனியா என்ற ஹிந்தி திரைப்படத்தின் அறிமுகமான மிருணாள் தாகூர் 2019 – ஆம் ஆண்டு சிறந்த நடிகையாக திரை உலகில் வலம் வந்தார்.

பாலிவுட் திரை படங்களில்  நடித்த இவர் 2022-ஆம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளி வந்த சீதாராமன் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார்.

நடிகை மிருணாள் தாகூர்..

இதனை அடுத்து ஹாய் நானா படத்தில் ஹீரோயினியாக நடித்த இவருக்கு தொடர்ந்து தென்னிந்திய திரைப்பட வாய்ப்புகள் அதிகளவு வந்து சேர்ந்தது.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக் கூடிய இவர் அடிக்கடி வண்ண, வண்ண உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

---- Advertisement ----

இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஃபாலோ செய்யும் ரசிகர்கள் அதிகளவு உள்ளதால் எப்போது புகைப்படத்தை வெளியிடுவார். இதனை எப்போது பார்க்கலாம் என்று காத்திருப்பார்கள்.

விலைமாது கட்டில் கீழே பார்த்த விஷயம்..

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை மிருணாள் தாகூர் திரைப்படம் ஒன்றில் விலைமாது கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நிஜ விலை மாதுவை சந்தித்து அவர்களுடைய அனுபவம் மற்றும் வாழ்க்கை முறை அவர்களுடைய பாவனை நடை தோற்றம் ஆகியவற்றை தெரிந்து கொள்ள நிஜமான விலை மாதுகள் இருக்கும் குடியிருப்புக்கு நான் சென்றிருந்தேன் எனக் கூறினார்.

அங்கே பலதரப்பட்ட பெண்களை நான் சந்தித்தேன். அதில்  அறை ஒன்றில் இருந்த அழகான பெண்ணை பார்த்து அவரிடம் சென்று பேசத் தொடங்கினேன்.

மேலும் அவருடைய கட்டில் மட்டும் சற்று உயரமாக இருந்தது எதற்காக கட்டிலுக்கு கீழே இவ்வளவு பெரிய கேப் இருக்கிறது என்று கேட்டேன்.

அதற்கு கீழே தலையணை படுக்கை விரிப்பு போன்ற விஷயங்கள் எல்லாம் இருந்தது. அதனை அடுத்து எதற்காக கட்டில் கீழே இவ்வளவு பெரிய கேப் இருக்கிறது என்று மீண்டும் அந்த பெண்ணிடம் நான் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன விஷயம் என அழ வைத்து விட்டது.

மிருணாள் தாகூர்  உடைத்த ரகசியம்..

அங்கே தான் அவருடைய கணவர் உறங்குவாராம்.ஸஅத்துடன் அவருடைய குழந்தைகள் உறங்குவார்களாம். மேலே வேறொரு ஆளுடன் இருக்கும் பொழுது கீழே அவருடைய குழந்தைகள் மற்றும் கணவர் உறங்குவார்கள் என்று கூறினார்.  இதனையடுத்து அது சரி ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினேன். 

அதற்கு அவர் கூறினார் ஒரு நாள் ஒரு நபருக்கு ஐம்பது ரூபாய் என்று கூறினார். ஒரு டாலரை விட குறைவான தொகைக்கு இந்த வேலையை செய்கிறீர்களா? என்று கேட்டேன்.

 அதற்கு தொடர்ந்து பேசிய அந்த பெண்மணி ஒரு நாளைக்கு பத்து முதல் 12 பேர் வருவார்கள் 500 ரூபாய் 600 ரூபாய் சம்பாதிக்க முடியும் என கூறினார்.எனக்கு கண்ணீர் வந்துவிட்டது என பேசி இருக்கிறார் நடிகை மிருணாள் தாகூர்.

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைகளாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக்கி அனைவரையும் உருக வைத்துள்ளது.

---- Advertisement ----