Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

பொம்பளைங்க மேட்டர்ல இவரு ரொம்ப வீக்.. இசையமைப்பாளர் குறித்து ரகசியம் உடைத்த பயில்வான் ரங்கநாதன்..

Tamil Cinema News

பொம்பளைங்க மேட்டர்ல இவரு ரொம்ப வீக்.. இசையமைப்பாளர் குறித்து ரகசியம் உடைத்த பயில்வான் ரங்கநாதன்..

நடிகர் பயில்வான் ரங்கநாதன் பத்திரிகையாளராகவும் இருக்கிறார். அதனால் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி சினிமா நடிகர், நடிகையர் பற்றிய பல விஷயங்களை தெரிந்தவராகவும் இருக்கிறார்.

நடிகர், நடிகையர் பற்றிய அந்தரங்க விஷயங்களை நேர்காணலில் போட்டு உடைப்பது அவரது ஸ்டைலாக இருக்கிறது.

பயில்வான் ரங்கநாதன்

கடந்தாண்டில் இரவின் நிழல் படம் வெளியான போது, அந்த படத்தில் ஆடையின்றி நடித்த நடிகை ரேகா நாயர் குறித்து பயில்வான் ரங்கநாதன் விமர்சித்து பேசியிருந்தார்.

அப்போது கடற்கரையில் வாக்கிங் சென்ற பயில்வான் ரங்கநாதனை வழிமறித்த ரேகா நாயர், அவருடன் கடுமையான வார்த்தைகளில் பேசி சண்டையிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கர வைரலானது.

--Advertisement--

ஆதாரம் இருக்கிறது

எனினும் நேர்காணலில் தொடர்ந்து பேசிவரும் பயில்வான் ரங்கநாதன், நான் யார் மீதும் அபாண்டமாக பேசவில்லை. நான் சொல்கிற விஷயங்கள் எல்லாவற்றுக்கும் ஆதாரம் இருக்கிறது.

நான் பார்த்த விஷயங்களை சொல்கிறேன். அல்லது நேரில் பார்த்தவர்கள் சொன்ன விஷயங்களை கேட்டு, சொல்கிறேன். சில நேரங்களில் சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள் சொன்ன விஷயங்களை உங்களிடம் பகிர்கிறேன். யார் மீதும் நான் வதந்தியாக பேசவில்லை என்று கூறி வருகிறார்.

ஏற்கனவே இரண்டு முறை தலைவராக இருந்துவிட்ட தீனா மீண்டும் இசை கலைஞர்கள் சங்க தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவர் தோற்று விட்டார்.

சபேசன் வெற்றி

இசையமைப்பாளர் தேவா தம்பி சபேசன் 70 ஓட்டுகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த இசைக் கலைஞர்கள் சங்க தேர்தலில் தோல்வியடைந்த இசையமைப்பாளர் தீனா குறித்து மிகவும் கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.

தீனா

சமீபத்திய நேர்காணலில் பயில்வான் ரங்கநாதன் பேசியதாவது, ஏற்கனவே தீனா சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர். நிறைய தில்லுமுல்லுகளை செய்தவர். அதுகுறித்து ஏற்கனவே காறி துப்பும் அளவுக்கு தீனா குறித்து கங்கை அமரன் பேசிவிட்டார்.

சினிமா வாழ்க்கையிலும் மட்டுமின்றி, நிஜ வாழ்க்கையிலும் தீனா மிகவும் மோசமான ஒரு ஆளாக இருந்திருக்கிறார்.

ஒரு பெண்ணை மடக்கி…

அவரிடம் வீணை வாசிக்க வந்த ஒரு பெண்ணை மடக்கி ஏமாற்றி திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு இப்போது ஒரு மகள் உள்ளார். ஆனால் குடும்பத்தை சரியாக கவனிக்கவில்லை என அவரது மனைவி, தீனாவை விட்டு விலகி சென்றுவிட்டார்.

அதன்பிறகு தன்னிடம் வாய்ப்பு கேட்டு வந்த ஒரு இஸ்லாமிய பெண்ணை மடக்கி, தன்னுடன் வைத்துக்கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார். அவருடன் பகலில் வாழ்க்கை நடத்துகிறார். இரவில் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்க்கை நடத்துகிறார்.

பகலிலும், இரவிலும்…

இப்படி பகலிலும், இரவிலும் மாறி மாறி பெண்களுடன் வாழ்ந்து வரும் தீனா, பெண்கள் விஷயத்தில் ஒரு மோசமான ஆள், என விமர்சித்து பேசியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

பொம்பளைங்க மேட்டர்ல தீனா ரொம்ப வீக்.. இசையமைப்பாளர் தீனா குறித்து ரகசியம் உடைத்த பயில்வான் ரங்கநாதன் சொன்ன விஷயங்களால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top