ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. மொத்தம் 4 பேருடன் உறவில் இருந்த நக்மா..! யார் யாருன்னு தெரியுமா..?

ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. மொத்தம் 4 பேருடன் உறவில் இருந்த நக்மா..! யார் யாருன்னு தெரியுமா..?

தென்னிந்திய திரை உலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களோடு நடித்த நடிகை நக்மா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இதற்கு காரணம் என்ன என்று தெரியுமா?

திரையுலகில் ஒருவனுக்கு ஒருத்தி என்றோ ஒருத்திக்கு ஒருவன் என்றோ நியதிகளை வகுத்து வாழ்வதில்லை. மாறாக அவர்களது திரைப்பட வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்து பல பேருடன் உறவில் வாழ்ந்து வருகிறார்கள்.

நடிகை நக்மா..

அந்த வரிசையில் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாத நடிகை நக்மா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் இவர் நடிப்பில் வெளி வந்த படங்களில் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர்.


தமிழ் திரை உலகின் பொருத்தவரை காதலன் என்ற படத்தில் அறிமுகமான இவர் பாட்ஷா, வில்லாதி வில்லன், லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி, ஜானகிராமன், பிஸ்தா, தீனா, சிட்டிசன் உள்ளிட்ட பல படங்களில் பல்வேறு கேரக்டர் ரோல்களை செய்து அசத்தியவர்.

இவர் சூப்பர் ஸ்டார் ஒரு ஜோடி போட்டு பாட்ஷா படத்தில் நடித்த போது அனைவரும் இவரை விரும்பியதோடு இளசுகளின் இதயக்கண்ணியாகவும் மாறினார் என கூறலாம்.

நாலு பேரோடு உறவா..

இந்நிலையில் திரை வாய்ப்பு சிறிது சிறிதாக கிடைக்காமல் இவர் மார்க்கெட் டல் அடித்ததின் காரணத்தால் அரசியலில் களம் இறங்கி விட்டார் என்று பரவலாக பேச்சுக்கள் எழுந்தது.

அத்தோடு இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் இவர் பல பிரபலங்களோடு லிவ்விங் டுகதர் முறையில் வாழ்ந்து வருகிறார் என்ற அதிர்ச்சி தகவலும் கசிந்து உள்ளது.

ஆரம்பத்தில் இவர் திரை வாய்ப்புகள் இல்லாத சமயத்தில் கிரிக்கெட் வீரர் கங்குலியை ரகசியமாக காதலித்து பின்னர் பிரேக்கப் செய்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் உத்திரப்பிரதேச மாநிலத்தின் நேரத் தொகுதியில் போட்டியிட்டார்.

யார் அந்த நாலு பேர்..

இதனை அடுத்து திரையுலகில் கொடி கட்டி பறந்த சமயத்தில் பல கிசுகிசுகளில் சிக்கி இருந்த இவர் ஆரம்ப கட்டத்தில் நடிகர் சரத்குமாரோடு நடித்த போது நெருக்கம் ஏற்பட்டதாக பரபரப்புச் செய்திகள் வெளிவந்தது இதனை அடுத்து இ சிஆரில் ஆடம்பர பங்களாவில் இருவரும் சேர்ந்து வசித்ததாகவும் பின்னர் மனகசப்பு ஏற்பட்டு பிரிந்ததாக தெரிகிறது.

இதனை அடுத்து பிரபுதேவாவுடன் நடித்த போது இருவரும் கிசுகிசுக்களில் பெரிய அளவு சிக்கி இருந்தார்கள். இதனை அடுத்து இவர்கள் இருவரும் நடித்த படங்களில் அதிக அளவு நெருக்கம் காட்டியதாகவும் இருவரும் காதலித்து வருவதாகவும் கூறப்பட்டது.


மேலும் மேட்டுக்குடி படத்தில் நடிக்கும் போது நடிகர் கார்த்திக் நக்மாவை தான் நடிக்க வைக்க வேண்டும் என்று அடம் பிடித்ததன் காரணத்தால் அவரோடும் கிசுகிசுக்கப்பட்ட இவர், நடிகர் சரத்குமார், பிரபு தேவா, நடிகர் கார்த்திக் மற்றும் கங்குலி போன்ற நால்வரோடும் உறவில் இருந்தார் என்ற கிசுகிசுக்கள் இன்று வரை பேசும் பொருளாக உள்ளது.

இந்நிலையில் இவர்கள் நால்வரிடமும் இருந்து பெற்ற ஏமாற்றத்தின் காரணத்தால் தான் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிள் லேடி ஆகவே அவர் இருக்கிறார் என்ற விஷயங்களும் புகைய ஆரம்பித்துள்ளது.