ஏத்தி விட்ட ஏணியை எட்டி உடைத்த நயன்தாரா.. விளாசும் ரசிகர்கள்..

ஏத்தி விட்ட ஏணியை எட்டி உடைத்த நயன்தாரா.. விளாசும் ரசிகர்கள்..

கேரளாவில் லோக்கல் சேனல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியவர் டயானா மரியம் குரியன்.

நயன்தாரா

கடந்த 2003ம் ஆண்டில் மனசினகாரே என்ற மலையாள படத்தில் நடித்து அறிமுகமானார். அந்த படத்தில் நடிப்பதற்காக நயன்தாரா என பெயர் மாற்றம் செய்யப்பட்டார்.

அதன்பிறகு 2005ம் ஆண்டில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் ஐயா என்ற படத்தில் நயன்தாரா அறிமுகமானார். இந்த படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்தார்.

சரத்குமாருக்கு ஜோடியாக…

இதில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அப்பா சரத்குமாருக்கு லட்சுமியும், மகன் சரத்குமாருக்கு நயன்தாராவும் ஜோடியாக நடித்திருந்தனர்.
இந்த படத்தில் நெப்போலியன், பிரகாஷ் ராஜ், சார்லி, ரோகிணி, வடிவேலு என என ஒரு நட்சத்திர கூட்டமே நடித்திருந்தது.

இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன் படம், அந்த படம் வெளியான போது பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது.

ஐயா படத்துக்கு பிறகு தமிழில் பல படங்களில் நடிக்க நயன்தாராவுக்கு வாய்ப்புகள் குவிந்தன.

கதையின் நாயகியாக…

சந்திரமுகி, கஜினி, கள்வனின் காதலி, வல்லவன், ஈ, பில்லா, யாரடி நீ மோகினி, வில்லு, குசேலன், ஆதவன், ராஜா ராணி, வேலைக்காரன், அறம் என பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகை ஆனார்.

இதையும் படியுங்கள்:  இதற்கு பிறகு தான்.. உடலுறவு விஷயத்தில் ஈடுபாடு அதிகமாச்சு.. கூச்சமின்றி கூறிய சமீரா ரெட்டி..!

கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், வாசுகி, நக்கீரன், மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில், நயன்தாரா தான் கதையின் நாயகியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டில் நடித்த முதல் படம்

கடைசியாக நயன்தாரா நடித்து வெளியான படம் அன்னபூரணி. இது அவரது 75வது படம். அதற்கு முன்பாக பாலிவுட்டில் அவர் நடித்த முதல் படம் ஜவான். இதில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். படம் செம ஹிட் ஆனது.

டைரக்டர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்துக்கொண்ட நயன்தாரா உலகம், உயிர் என்ற 2 பிள்ளைகளை வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்து வளர்த்து வருகிறார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட தன் குழந்தைகளுடன் காணப்படும் அன்பான தாயாக காணப்படுகிறார்.

இயக்குநர் ஹரி

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தமிழ் சினிமாவில் நயன்தாராவை ஐயா படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஹரி.

இதையும் படியுங்கள்:  ஆத்தாடி.. எத்தா தண்டி.. வெறும் ஜட்டி.. முழுசாக தெரிய போஸ் கொடுத்துள்ள ஷிவானி நாராயணன்..

அவரது அடுத்த படமான தாமிரபரணியில் நடிக்க நயன்தாராவை கேட்ட போது, நடிக்க முடியாது என மறுத்து இருக்கிறார். அதன்பிறகு இதுவரை ஹரி இயக்கிய எந்த படத்திலும் நயன்தாரா நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏத்திவிட்ட ஏணியை…

தாமிரபரணி படத்தில் நயன்தாரா நடிக்க மறுத்ததால், அவரைப் போல தோற்றம் கொண்ட பெண்ணாக தேடி, முக்தா பானுவை தாமிரபரணி படத்தில் நடிக்க வைத்துள்ளார் இயக்குநர் ஹரி.

இப்படி ஏத்தி விட்ட ஏணியை எட்டி உடைத்த நயன்தாரா, இயக்குநர் ஹரியிடம் நடந்துக்கொண்டதை விளாசி வருகின்றனர் ரசிகர்கள். பெண்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்வது என்ன புதுசா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

   

--Advertisement--