“காதலிக்கும் போது இதை நான் யோசிக்கவே இல்ல..” – நான் விரல் சூப்பும் பாப்பா இல்லை..! – நயன்தாரா ஒப்பன் டாக்..!

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமண வைபவம் வீடியோவாக விரைவில் நெட்ஃப்ளிக்ஸ்-ல் வெளியாக இருக்கின்றது. இந்த வைபவ வீடியோவின் ப்ரோமோ வீடியோக்கள் சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது.

நடிகை நயன்தாராவின் வாழ்க்கையில்.. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில்.. காதல் வாழ்க்கையில் என எத்தனை சிக்கல்கள் இருந்தது என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. ஒருவழியாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து தற்போது அவரது மனைவியும் ஆகிவிட்டார்.

கடந்த ஜூன் 9-ஆம் தேதி மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது, கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற இந்த திருமணத்தில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

காரணம் நயன்தாராவின் ஒட்டுமொத்த திருமண வைபவம் வீடியோவாக பதிவு செய்ய பிரபலமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் உரிமையை பெற்றிருந்தது. எனவே கடும் கட்டுப்பாடுகளுடன் இந்த திருமணம் நடைபெற்றது.

அழைப்பிதழ் வைத்திருந்த பிரபலங்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். இந்த திருமணத்தை முழுக்க முழுக்க படமாக்கும் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பெற்ற காரணத்தினால் பத்திரிக்கையாளர்கள் இந்த திருமணத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

---- Advertisement ----

இதற்காக சாப்பாடு, ஹோட்டல் அறை, டெக்கரேஷன், மேக்கப் பாதுகாப்பு உள்ளிட்ட செலவுகளை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டதாகவும் அந்த வகையில் 25 கோடி ரூபாய் வரை அந்த நிறுவனம் செலவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இவருடைய திருமண வீடியோ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அந்த வீடியோவில் பேசிய நடிகை நயன்தாரா எனக்கு கொடுக்கப்பட்டுள்ள லேடி சூப்பர் ஸ்டார் என்ற தலைப்பு பற்றி எனக்கு ஐடியாவே இல்லை. விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கும் போது.. இது எப்படி இருக்க போகிறது.. எப்படி போக போகின்றது.. என்று எதையும் நான் யோசிக்கவில்லை.

நான் ஒன்னும்.. படங்களில் வருவது போன்ற விரல் சூப்பும் பாப்பா கிடையாது.. நான் ஒரு சாதாரண பெண்.. எதை செய்தாலும் அதில் எனது 100 சதவீதத்தை கொடுப்பேன்… அதே போல தான் இப்போதும் இருக்கிறேன்.. இருப்பேன் என பேசியிருக்கிறார்.

---- Advertisement ----