ப்பா..! – இப்போ தான் பூத்த புது மொட்டு போல நடிகை நயன்தாரா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. ஐயா படத்தில், அறிமுகமான இவரது, ஆரம்ப கால படங்கள் மற்ற நாயகிகளை போல, மிக சாதாரண கேரக்டர்களாக தான் இருந்தன. அடுத்தடுத்து முக்கிய ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவரானார். அதற்குள் சிம்பு, பிரபுகேதவா ஆகியோருடன் காதல் சர்ச்சைகளில் சிக்கினார்.

நயன்தாரா நடித்த படங்களில் சந்திரமுகி, வல்லவன், ஈ, யாரடி நீ மோகினி, தர்பார், கஜினி, தலைமகன், பில்லா, குசேலன், வில்லு, ஆதவன், பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, தனி ஒருவன், வேலைக்காரன், காஸ்மோரா, நண்பேன்டா, பிகில், விஸ்வாசம், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் என, இவர் நடித்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன.

இதில் மாயா, டோரா, அறம், இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா, ஐரா, கொலையுதிர்க்காலம், நெற்றிக்கண், ஓ2, கனெக்ட் உள்ளிட்ட படங்கள், கதையின் நாயகி இவர்தான். இப்போது ஜெயம் ரவியுடன் இறைவன், ஷாருக்கானுடன் ஜவான் படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா, தனது 75 வது படத்தை இயக்கும் வாய்ப்பை, புதுமுக இயக்குநர் ஒருவருக்கு தந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனி நாயகியாக இவர் நடித்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அபரிமிதமான வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் தானாகவே நயன்தாராவுக்கு அமைந்தது.

நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது, இவருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டது. ஏழு ஆண்டுகளாக இவர்களது காதல் தொடர்ந்த நிலையில், கடந்தாண்டில் தான் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில மாதங்களிலேயே வாடகைத்தாய் மூலம், இந்த ஜோடி இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்டது பலத்த சர்ச்சையை கிளப்பியது.

முறையான விதிமுறைகளை பின்பற்றி விக்கி– நயன் இரட்டை குழந்தைகளை வாடகைத்தாய் மூலம் பெறவில்லை என்ற பலத்த குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இதனை விசாரித்த மருத்துவக்குழு, உரிய விதிமுறைகளை பின்பற்றி சரியான முறையில்தான் இவர்கள் நடந்து்ள்ளனர், இதில் விதிமீறல் எதுவும் நடக்கவில்லை என,  அரசு மருத்துவத்துறை அறிக்கை அளித்தது. இதையடுத்து, இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. இப்போது அந்த குழந்தைகளுக்கு நயன்– விக்கி தம்பதி, உயிர், உலகம் என்ற பொருளில் பெயர் வைத்ததால், அதுவும் இப்போது பரபரப்பாகி இருக்கிறது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு நடந்த விருது விழா ஒன்றில், நயன்தாரா பங்கேற்று இருக்கிறார். அதில், வெண்மை நிற பளபளக்கும் புடவையில் மிக மிக அழகாக இருக்கிறார். அவருடன் நடிகை ஷாக்சி புகைப்படங்கள் எடுத்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. அழகு கொஞ்சும் நயன்தாரா படங்களை பார்க்கும் ரசிகர்கள்., அப்…ப்பா, என்னா அழகுடா, என அங்கலாய்த்து வருகின்றனர்.