கையில் பேனாவுடன் கூல் போஸ் கொடுத்துள்ள நடிகை நயன்தாரா..! – வைரல் போட்டோஸ்..!

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக இருக்கும் நயன்தாரா சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்தடுத்து ரஜினி, விஜய் ,அஜித் என முன்னணி நாயகர்களுக்கு ஜோடியானார் நயன்.

காதல் முறிவுக்கு பிறகு சில நாட்கள் எந்த சிக்கலிலும் சிக்காமல் ஒதுங்கி இருந்த நயன் பின்னர் பிரபல நடிகரும் நடன இயக்குனருமான பிரபு தேவாவை காதலித்தார். இருவரும் கோவில் குளம் என சுற்றி வந்தனர். ஏற்கனவே திருமணமாகி மூன்று பிள்ளைகளுக்கு தகப்பனான பிரபு தேவா..நயன்தாராவை திருமணம் செய்து கொள்வதற்காக மனைவியை விவாகரத்து செய்தார்.

இதையும் படிங்க : பேட்டியின் நடுவே கழண்ட மேலாடை – தீயாய் பரவும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் புகைப்படங்கள்..!

காதல் பறவைகள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் திடீரென இருவரும் பிரிந்தனர். முன்னதாக காதலனை கைப்பிடிக்க உள்ளதால் சினிமாவை விட்டு விலகுவதாக நயன்தாரா கூறியிருந்தார். இந்நிலையில் இருவரும் எந்த காரணமும் வெளியில் கூறாமல் பிரிந்தனர்.

இதையடுத்து பிரபு தேவா காலதாமதம் செய்யாமல் மறுமணம் செய்து கொண்டார். அதேபோல நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் செட்டில் ஆனார். இவர்கள் இருவரும் பல வருட காதல் உறவில் உள்ளதோடு ரவுடி பிக்சர்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர்.

---- Advertisement ----

இந்நிலையில் நயன்தாரா ஸ்கிரிப்ட் எழுதுவது போன்ற அழகிய போஸ் கொடுத்துள்ளார். அவர் அமர்ந்திருக்கும் டேபிள் மேல் விக்னேஷ் சிவனின் புகைப்படம் உள்ளது. இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

---- Advertisement ----