உலகின் உயரமான கட்டடத்திற்கு கீழே நின்று கணவருடன் ரொமான்ஸ்..! – வைரலாகும் நயன்தாராவின் புகைப்படம்..!

திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்துக்கு ஹனிமூன் அதன் பிறகு மீண்டும் இந்தியாவுக்கு திரும்பிய நயன்தாரா மறுபடியும் இரண்டாவது ஹனிமூனுக்காக ஸ்பெயினுக்கு சென்றிருந்தார்.

தற்போது துபாய்க்கு வந்திருக்கும் நடிகை நயன்தாரா அங்கே தன்னுடைய தேனிலவை தொடர்ச்சியாக கொண்டாடி வருகிறார். தாங்கள் செல்லும் நாடுகளிலிருந்து புகைப்படங்களை வெளியிடும் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி தற்போது துபாயின் புர்ஜ் கலீபா கட்டிடத்தில் கீழே ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்கள்.

திருமணம் ஆனது முதலே தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வரும் நடிகை நயன்தாரா தற்போது தன்னுடைய கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.

திருமணத்திற்கு முன்பு கமிட்டான படங்களில் நடித்து முடித்துவிட்டு தொடர்ந்து படங்களில் நடிக்கப்போவதில்லை சினிமாவில் இருந்து விலகி இருக்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் நடிகை நயன்தாரா படங்களில் நடிக்கவில்லை என்றாலும் படங்களை தயாரிப்பதில் தன்னுடைய கவனத்தை செலுத்துவார். எனவே சினிமா அவருக்கும் நயன்தாராவுக்கும் உண்டான தொடர்பு நீடித்துக் கொண்டே தான் இருக்கும் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

---- Advertisement ----

மட்டுமில்லாமல் தன்னிடம் இருக்கும் பணத்தை முறையான தொழிலில் முதலீடு செய்ய நடிகை நயன்தாரா ஆர்வம் காட்டுகிறார் என்றும் அதன்படி தொடக்க நிலையில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்ய நடிகை நயன்தாரா அதிக ஆர்வத்துடன் இருக்கிறார் என கூறுகிறார்கள்.

சமீபத்தில் நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது கணவர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை கொண்டாட துபாய்க்குச் சென்று இருக்கும் நடிகை நயன்தாரா தன்னுடைய கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

---- Advertisement ----