“நிறைமாத கர்ப்பம்..” – கவர்ச்சியான உடையில்.. மகாராணி போல நீலிமா ராணி போட்டோ ஷூட்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் நடிகை நீலிமா ராணி தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் நிலையில், எலிசபெத் ராணிபோல் மிகவும் வித்தியாசமாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி, ரசிகர்களை அசர வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

கமலின்சின்னத்திரையில் 2000ம் ஆண்டுகளில் ராணியாக வலம் வந்தவர் நீலிமா ராணி. இவர் தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார். தொடர்ந்து சின்னத்திரையில் ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி, அத்திப்பூக்கள் என பல சீரியல்களில் நடித்து பிரபலமானார். இதற்கிடையில் பாண்டவர் பூமி, திமிரு, சந்தோஷ சுப்பிரமணியம், பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல, குற்றம் 23 உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்தார்.

குறிப்பாக வில்லி வேடத்தில் பின்னிபெடலெடுத்து வருகிறார்.கோலங்கள், மெட்டி ஒலி சீரியல்கள் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நீலிமா. அனைவரும் அறிந்த பிரபலமான சின்னத்திரை முகமாக வலம் வருகிறார்.சீரியல், சினிமா, தொகுப்பாளினி, தயாரிப்பாளர் என பல அடையாளங்களைக் கொண்டுள்ள நடிகை நீலிமா ராணி.

சீரியல்கள், திரைப்படங்கள் மூலமாக தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள இவர் தற்போது, தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து, அதில் ஏராளமான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். மேலும், சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது எடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இவருக்கு திருமணம் ஆகி, ஏற்கனவே பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில்… தற்போது இரண்டாவது முறையாக கற்பமாகியுள்ளார்.இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதால், அனைத்து சீரியல்களில் இருந்தும் விலகி தன்னுடைய குடும்பத்துடன் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்.

---- Advertisement ----

ஏற்கனவே மிகவும் வித்தியாசமாக கர்ப்பகால போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி ரசிகர்களை வியக்க வைத்த நீலிமா இசை தற்போது எலிசபெத் மகாராணி தோற்றத்தில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

---- Advertisement ----