“படத்தில் நடிக்கணும்ன்னு கூட்டிட்டு போவாங்க.. – ஆனா, போன அப்புறம்..” – வெளிப்படையாக கூறிய நீலு ஆண்ட்டி…!

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் தொடர்ந்து நடித்து வந்தாலும் பிரபலமாக முடியாமல் தடுமாறி வருவார். அதேபோல் ஒரு சில நடிகைகள் படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்து வந்தாலே போதும் பிரபலமாகி விடுவார்கள் அந்த வகையில் இரண்டாவது ரகத்தை சேர்ந்தவர் சிங்கம் புலி படத்தில் நடித்த நீலு ஆண்டி ( Neelu Aunty ).

சிங்கம் புலி படத்தில் சிறிய காட்சியில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர் நீலு ஆன்ட்டி இவர் ஜீவாவுடன் நடித்த ரொமான்ஸ் காட்சிகள் அனைத்தும் வேற லெவல் அதுவும் கடைசியில் ஜீவா உடைய தோழியின் அம்மா என்று தெரியவரும் பொழுது படம் வேற லெவல்.இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் நீலு ஆன்ட்டி.

அது மட்டுமில்லாமல் பல ரசிகர்கள் இவர் சிங்கம் புலி படத்தில் மட்டும்தான் நடித்திருந்தார் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் இவர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த காட்சிகளை தோண்டி எடுத்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.சமீபத்தில் ஒரு பேட்டியில், ஒரு படத்தில் நடிக்க வேண்டும். அந்த கேரக்டர்.. இந்த கேரக்டர்.. ஹீரோயினுடன் வரும் சீன்.. ஹீரோவுடன் வரும் சீன் என்று தான் அழைப்பார்கள்.ஆனால், நீண்ட தூரம் பயணித்து படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிறகு குட்டியான உடைகளை கொடுத்து நடிக்க சொல்வார்கள்.

இதனை அணிந்து கொண்டு நடிக்க முடியாது என்று மறுத்தால்.. சரி நடிக்க முடியாதவர்கள் கிளம்புங்கள் என்று கூறி விடுவார்கள்.நீண்ட தூரம் பயணம் செய்து வந்த பிறகு திரும்பி போங்க என்று இப்படி சொன்னால் துணை நடிகைகள் என்ன செய்வார்கள். மேலும், வேண்டுமென்றால் பேமெண்ட் அதிகமாக குடுக்குறோம் நடிங்க என்று கூறுவார்கள்.

---- Advertisement ----

அவர் அவர்களுக்கு ஆயிரத்தெட்டு பணப்பிரச்சனை இருக்கும் போது இப்படி சொன்னால் என்ன பண்ணுவார்கள்.சரி என்று சில நடிகைகள் ஒத்துக்கொண்டு நடிப்பார்கள். சிலர் அப்போதும், குட்டியான உடைகளை அணிந்து நடிக்க முடியாது மறுத்து விட்டு திரும்பியும் சென்று விடுவார்கள். இப்படி பல பிரச்சனைகள் உள்ளது.

எல்லாவற்றையும் கடந்து நடித்துகொடுத்து சம்பாதிக்கிறோம். ஆனால், எங்களுடைய கஷ்டம் பலருக்கும் வெளியே தெரிவது கூட இல்லை என்று சிரித்தபடியே கூறுகிறார் நீலு ஆண்ட்டி.

---- Advertisement ----