இப்படி இருந்தா.. கவர்ச்சி காட்டக்கூடாதா.. – வெளிப்படையாக பேசிய நிவேதா தாமஸ்..!

நிவேதா தாமஸ் ( Nivetha Thomas ) தென்னிந்தியத் திரையுலகில் மலையாளத் திரைப்படங்கள் மூலம் நுழைந்த குழந்தை நட்சத்திரங்களில் ஒருவர், இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனது அப்பாவித்தனமான மற்றும் அழகான தோற்றத்தால் தனக்கான இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

தொலைக்காட்சி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய நிவேதா, பின்னர் பெரிய திரையில் நுழைந்தார். சினிமாவில் அறிமுகமாகும் முன்பே மை டியர் பூதம் என்ற மாயாஜால தொடரில் நடித்ததன் மூலம் 90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் பிரபலமாகியிருந்தார் அம்மணி.

முதலில்., அவர் ‘வெறுதே ஒரு பர்யா’ என்ற மலையாள படத்தில் ஜெயராமின் மகளாக நடித்தார், மேலும் 2011 இல் இயக்குனர் சமுத்திரக்கனியின் ‘போராளி’ படத்தில் நடித்தார்.

ரசிகர்களின் கனவுலகில் காலடி..

கமல்ஹாசனுடன் ‘பாபநாசம்’ படத்தில் நடித்தபோது புகழ் பெற்றார், மேலும் தெலுங்கில் நானியின் ‘ஜென்டில்மேன்’ படத்தில் இலை மறை காய் மறையாக கவர்ச்சியாக நடித்தன் மூலம் ரசிகர்களின் கனவுலகத்திற்குள் அடி எடுத்து வைத்தார்.

பின்னர் ‘நின்னு கோரி’ மற்றும் ஜூனியர் என்டிஆரின் ‘ஜெய் லவ குசா’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது, ​​அவர் ஒரு புதிய தமிழ் திரைப்படத்திற்கான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்.

---- Advertisement ----

தொடர்ந்து வாய்ப்பை பெற புதிய படங்களிள் கவர்ச்சியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி இருந்தா கிளாமர் காட்ட கூடாதா..

கிளாமராக நடிப்பது குறித்து அவர் கூறுகையில், “எனக்கு எனது எல்லை தெரியும், எல்லை மீற மாட்டேன். இருப்பினும், குண்டாக இருப்பதால், இதுபோன்ற வேடங்களில் நடிப்பதை தடுக்க முடியாது. குண்டாக இருப்பதால் கவர்ச்சியாக நடிக்க கூடாதா.. 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன், கவர்ச்சியாக நடிப்பதை என்னால் சமாளிக்க முடியும் என நினைக்கிறேன்.” என கூறியுள்ளார்.

---- Advertisement ----