நைட் பார்ட்டியால் தடம் மாறிய வாழ்க்கை.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய புன்னகையரசி சினேகா..!

தமிழ் சினிமாவில் நாகரிகமான உடைகளை மட்டுமே உடுத்தி ஒரு நடிகை பெரும் கதாநாயகி ஆக முடியும் என்று நிரூபித்த ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சினேகா.

புன்னகைக்கரசி என்று பலராலும் அழைக்கப்படும் நடிகை சினேகா 1990 கால கட்டங்களில் பெரும் அளவில் ரசிக கூட்டத்தை கொண்டிருந்த ஒரு நடிகை என்றும் கூறலாம். உண்மையில் அப்பொழுது கவர்ச்சியாக நடித்த நடிகைகள் பலரும் கூட சினேகாவை பார்த்து பொறாமைப்பட்டது உண்டு.

ஏனெனில் கவர்ச்சியாக நடித்தும் கூட அவர்களுக்கு கிடைக்காத வரவேற்பும் ரசிகர்களும் சினேகாவிற்கு மிக எளிதாகவே கிடைத்தது. முக்கியமாக சினேகா பார்ப்பதற்கு நடிகை போல அல்லாமல் அனுதினமும் மக்கள் பார்த்து ரசிக்கும் ஊர் பெண்ணாக தெரிந்தார்.

பிரபலங்களுடன் வாய்ப்பு:

அதனாலேயே அவரது திரைப்படங்களுக்கு தொடர்ந்து வரவேற்புகள் என்பது கிடைத்து வந்தது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித் விஜய் கமல் தனுஷ் சிம்பு என்ற பலருடனும் சேர்ந்து நடித்தார் நடிகை சினேகா.

---- Advertisement ----

இயக்குனர் விக்ரமன் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் துவங்கி இப்போது வரை பிரபலமாக இருக்கும் ஒரு நடிகையாக இருக்கிறார் சினேகா என்று கூறலாம். 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சினேகா.

சினேகா எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பதே வெகு காலங்களாக பேச்சாக இருந்து வந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு இவ்வாறு அவருக்கு திருமணம் நடந்தது.

சின்னத்திரையில் நடுவர் வேலை:

அதனை தொடர்ந்து இவருக்கு இரண்டு குழந்தைகளும் இருந்து வருகின்றனர். தற்சமயம் சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஜட்ஜ் ஆக பங்கு பெற்று வருகிறார். ஜீ தமிழில் நடைபெறும் ஒரு டான்ஸ் நிகழ்ச்சியில் கூட நடுவராக இவர் இருந்து வருகிறார்.

இதற்கு நடுவே தற்சமயம் கோட் திரைப்படத்திலும் நடிகர் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்திருக்கிறார். பெரும்பாலும் நடிகைகள் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டார்கள். ஆனால் சினேகா அப்படியும் கூட தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

நடிகர் தனுஷ் நடித்த கொடி திரைப்படமெல்லாம் சினேகாவிற்கு திருமணம் ஆன பிறகு நடித்த திரைப்படங்கள்தான். இந்நிலையில் சினேகாவின் வாழ்க்கை மாறியது ஒரு பார்ட்டியில்தான் என்று பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் கூறி இருப்பது அதிக சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

மலையாளத்தில் ஸ்டார் நைட் என்ற நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதை பார்ப்பதற்கு சினேகா ஒரு முறை சென்றிருந்தார். அப்பொழுது சினேகாவை பார்த்த பலரும் அவர் பார்ப்பதற்கு கதாநாயகி போலவே இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு ஒரு மலையாள திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் அந்த திரைப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. அதனை தொடர்ந்து தமிழில் விரும்புகிறேன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சினேகா அதற்குப் பிறகு பெரும் நடிகையாக மாறினார் என்று கூறுகிறார் பயில்வான் ரங்கநாதன். எனவே அவரது சினிமா வாழ்க்கை துவங்கியது அந்த பார்ட்டியில் இருந்து தான் என்று கூறலாம்.

---- Advertisement ----