500 கோடிக்கு மேல் உருவாக போகும் பான் இந்தியா படத்தில் – நடிகர் சூர்யா!

பல மொழிகளில் குறிப்பாக மூன்று மொழிகளுக்கு மேல் உருவாக்கப்படக்கூடிய  பான் இந்தியா திரைப்படம் 500 கோடிக்கு மேல் முதலீடு செய்து தயாரிக்கப்பட உள்ளது. இந்த படத்தில்   நாயகனாக நடிகர் பிரபாஸ் நடிக்க, இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் புரோசெக்ட் K ஆகும். இப்படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோண் உள்ளிட்டோர் நடித்து வருகின்றார்கள்.

மேலும் தற்போது தமிழ் படத்தில் அதிக அளவு நடித்து வரும் நடிகர் சூர்யா இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது இவர் சமீபத்தில் தான் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் வேடத்தில் நடித்திருந்தார் அது போலவே இந்தப் படத்திலும் ஒரு குறிப்பிட்ட கனமான பாத்திரத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

சூர்யா நடித்து வரும் படமானது இரண்டு பகுதிகளாக வரும் என்று அதை இயக்கக்கூடிய இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார். நீண்ட படம் சூர்யாவின் 42வது திரைப்படமாக இருக்கும் எனவே மிக அக்கறையுடன் என்ற படத்திற்கான வேலைகள் விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது.

ஏற்கனவே பாகுபலி படம் எத்தகைய வெற்றியை சூடியது என்பது நமக்கு தெரியும் அவரை வைத்து மீண்டும் இயக்கக்கூடிய என்ற ப்ராஜெக்ட் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது மேலும் இந்த படத்தில் சூர்யாவுக்கு கிடைத்திருக்கக் கூடிய வாய்ப்பு மிகவும் பெரிய வாய்ப்பு என்றே கருதவேண்டும் விக்ரமாதித்தன் என்ற படத்தில் சாதிப்பாரா என்று யோசிப்பதற்கு முன்னால் இது உண்மையான தகவல் என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.

அப்படிக் கிடைத்தால் நிச்சயம் சூரியா அந்த படத்தில் குறிப்பிட்ட வெயிட்டான வேடத்தில் தன்னை நிலைநிறுத்தி தன்னுடைய நடிப்புத் திறனை மீண்டுமொரு முறை பறைசாற்றுவார்.

---- Advertisement ----

ரசிகர்கள் அந்த அறிவிப்பு உண்மையாக இருக்கவேண்டும் என்று காத்திருக்கிறார்கள். களத்தில் இறங்க சூர்யாவும் தயாராக இருப்பார் என்றுதான் நினைக்கிறோம். நிச்சயமாக இந்த படம் ஒரு வெற்றி படமாக அமைய இறைவனை வேண்டிக்கொள்வோம்

---- Advertisement ----