நடிகை பார்வதி நாயர் ( Parvathy Nair ) இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் அவர். இவர் தமிழில் ‘என்னை அறிந்தால்’ என்னும் திரைப்படத்தின் மூலம் மக்களிடையே அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன.
நடிகை பார்வதி நாயர் இவர் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி துபாயில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார். இவர் ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு மாடலிங் துறையில் இருந்து அவ்வப்போது குறும்படங்களில் நடித்து வந்த பார்வதி நாயருக்கு திரைப்படத்துறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
Image Source : instagram.com/paro_nair/ஆங்கிரி பேபீஸ் இன் லவ் எனும் மலையாள திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக அறிமுகமானார் பார்வதி நாயர் இந்த படத்தில் தனது மிகச் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியதன் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன. மேலும் பாப்பீன்ஸ், யாக்ஷி, நீக்கோ, நெஞ்சா டால்ஸ், ஸ்டோரி கதை போன்ற நிறைய மலையாள படங்களிலும் நடித்து வந்தார் பார்வதி நாயர்.
Image Source : instagram.com/paro_nair/இந்த நிலையில் தமிழில் முதன்முதலாக என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ்நாடு மக்களிடையே மாபெரும் வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன. மேலும் உத்தம வில்லன் மாலை நேரத்து மயக்கம் கோடிட்ட இடங்களை நிரப்புக என்கிட்ட மோதாதே போன்ற நிறைய படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் கால் பதித்தார்.
Image Source : instagram.com/paro_nair/இந்த நிலையில் பார்வதி நாயருக்கு தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார். மேலும் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் தமிழ் புத்தாண்டை ஒட்டி சேலை கட்டிய சிலை மாதிரி போட்டோ எடுத்து அதை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்.
---- Advertisement ----
மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்