ஹீரோயின் போல இருக்கும் நடிகர் பசுபதியின் மகளை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் எம் என் நம்பியார், அசோகன், பிஎஸ் வீரப்பா, ரகுவரன், நாசர், பிரகாஷ் ராஜ் வரிசையில் வில்லத்தனமான நடிப்பில் ரசிகர்களை மிரட்டிய நடிகர்கள் ஒரு சிலர் மட்டுமே இருக்கின்றனர்.

அதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு முக்கியமான வில்லன் நடிகர் பசுபதி. பசுபதியின் வில்லத்தனமான நடிப்பு, ரசிகர்களை சில படங்களில் மிரளச் செய்திருக்கிறது.

பசுபதி

என் பேரு பட்டாசு பாலு, இந்த பாலு பேச மாட்டான். பட்டாசு தான் பேசும் – விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில், இந்த டயலாக் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒரு கவனிப்பை ஏற்படுத்திய வில்லன் நடிகர். பசுபதி

சியான் விக்ரம் நடித்த தூள் படத்தில் சொர்ணக்கா குரூப்பில், மிக கொடூரமான ஒரு வில்லனாக நடித்திருப்பார். அந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் வில்லன் நடிப்பில் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மனம் கவர்ந்தவர் பசுபதி.
விருமாண்டி படத்தில்…

குறிப்பாக விருமாண்டி படத்தில் கமலுக்கு வில்லனாக மதுர, திருப்பாச்சி படங்களில் விஜய்க்கு வில்லனாக, தூள், அருள் படங்களில் விக்ரமுக்கு வில்லனாக மிரட்டலான நடிப்பை தந்திருப்பார்.

--Advertisement--

பிறகு குணச்சித்திர நடிப்புக்கு மாறிய பசுபதி, சில படங்களில் காமெடி நடிப்பிலும் அசத்தினார். குறிப்பாக மஜா படத்தில் அவரது விக்ரம், பசுபதி, வடிவேலு காமெடி நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

காமெடி கூட்டணி

மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் கமல், ரமேஷ் அரவிந்த், வையாபுரி, பசுபதி காமெடி கூட்டணி ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தது. அடுத்து பசுபதி வெடிகுண்டு முருகேசன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அதே போல் வெயில் படத்தில், அவரை வேற லெவலில், வசந்த பாலன் நடிக்க வைத்திருந்தார் என்பது மிகவும் பாராட்டுக்குரியது.

குறிப்பாக பசுபதி நடித்த படங்களில் அழுத்தமான நடிப்பை வழங்கிய படம் என்றால் அது ஜெகநாதன் டைரக்சன் செய்த ஈ படம்தான். அதில் ஒரு போராளியாக தன்னை வெளிப்படுத்தி இருப்பார்.

ரஜினியின் பால்ய கால நண்பனாக…

அதைத் தொடர்ந்து இயக்கிய குசேலன் படத்திலும், ரஜினியின் பால்ய கால நண்பனாக பார்பர் பாலுவாக அவரது நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது.

எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும், அதில் தன்னை சிறப்பாக பொருத்திக் கொண்டு, அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய ஒரு நடிகர் யார் என்றால் அது பசுபதி தான்.

கமல், விக்ரமுக்கு அடுத்தப்படியாக தமிழ் சினிமாவில் நடிப்பில் சிறந்த நடிகர் என்று பசுபதியை சொல்வதுண்டு.

கூத்துப்பட்டறை நடிகர்

துவக்கத்தில், கூத்துப்பட்டறையில் இருந்து சினிமாவை அழைத்து வந்தவர் நடிகர் நாசர். இப்போதும் தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் பசுபதி. அவர் சூர்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கதாநாயகி அழகில் பசுபதி மகள்

அவரது மகளுடன் இருக்கும் புகைப்படம், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஏனெனில், அடுத்து கதாநாயகியாக நடிக்கும் அளவுக்கு மிக அழகாக பசுபதியின் மகள் இருப்பதால், மிக விரைவில் அவர் சினிமா நடிக்க வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஹீரோயின் போல இருக்கும் நடிகர் பசுபதியின் மகளை பார்த்துள்ளீர்களா, என்று ரசிகர்கள் பலரும் அந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.