கண்ணை கட்டி போட்டு முட்டி போடவைத்து என்ன செய்யப் போறாங்களோ..?? காத்திருக்கும் கார்த்தி  பரபரப்பை தூண்டும் பொன்னியின் செல்வன்-2..!!

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி இயக்குனர் மணிரத்தினம் எடுத்த மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட ‘பொன்னியின் செல்வம்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக தமிழ், தெலுங்கு மலையாளம் ஹிந்தி கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் எடுக்கப்பட்டது.

இந்த படம் முதல் பாகம் வெளியான நிலையில் இரண்டாம் பாகத்திற்காக மக்கள் அனைவரும் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். முதல் பாகத்தில் கார்த்தி, திரிஷா, சரத்குமார் ஐஸ்வர்யா ராய் ,ஜெயராம் போன்ற முன்னணி கதாபாத்திரங்கள் நிறைந்திருந்த இந்த படத்தில் இனி இரண்டாம் பாகம் இந்த வருடம் இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் அனைத்து மொழியிலும் வெற்றிப்படம் என்பதால் 500 கோடியை தாண்டியது இதனுடைய கலெக்சன். இந்நிலையில் இரண்டாம் பாகம் வெளியிட்டால் ஆயிரம் கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்சமயம் ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று இணையத்தில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்தில் நடிகர் கார்த்தி கண்ணை கட்டியபடி கீழே முட்டி போட்டு உட்கார்ந்திருக்கிறார்.அவர் அருகில் நடிகை திரிஷா கையில் வால் ஏந்தியவாறு அவரை பார்த்து கேள்விகள் கேட்கும் விதத்தில் நின்று கொண்டிருக்கிறார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது மிகவும் சுவாரஸ்யம் நிறைந்த காட்சிகள் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் என்று அனைவரும் நம்புகின்றனர்.

---- Advertisement ----

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

 

---- Advertisement ----