நடிகை பூனம் பாஜ்வா ஆடை இல்லாமல் நிற்கும் என்னுடைய புகைப்படத்தை பார்த்தபோது எப்படி இருந்தது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
நடிகை பூனம் பஜ்வா தமிழ் சினிமாவில் சேவல் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தற்பொழுது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் இணைய பக்கங்களில் நடிகைகளை மோசமாக சித்தரித்து புகைப்படங்களை வெளியிடக்கூடிய நபர்களை பற்றி என்ன சொல்கிறீர்கள்.
உங்களுடைய புகைப்படங்கள் கூட மோசமான முறையில் சித்தரிக்கப்பட்டு இணைய பக்கங்களில் கிடைக்கிறது. இது குறித்து உங்களுடைய கருத்து என்ன..? என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நடிகை பூனம் பாஜ்வா நீங்கள் சொல்வது சரிதான். நானே என்னுடைய புகைப்படத்தை பார்த்திருக்கிறேன். அந்த அளவுக்கு தத்ரூபமாக எடிட் செய்திருந்தார்கள். ஒரு நிமிடம் நானே குழம்பி போய் விட்டேன்.
அந்த அளவுக்கு உண்மையாக தத்ரூபமாக என்னை ஆடையின்றி எடிட் செய்திருந்தார்கள். இதனை முதல் முறை பார்த்தபோது எனக்கு இரண்டு நாட்கள் தூக்கம் வரவில்லை. சரியாக என்னால் சாப்பிட முடியவில்லை. என்னுடைய கவனம் முழுதும் சிதறி போனது.
அதன் பிறகு மெல்ல மெல்ல நான் இயல்பு நிலைக்கு வந்தேன். அந்த புகைப்படத்தை உடனே நீக்குமாறு சமூக வலைதளத்தில் புகார் செய்தேன். அதன் பிறகு அதனை நீக்கி விட்டார்கள்.
ஆனால் தொடர்ந்து இது போன்ற புகைப்படங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த பக்கத்தில் நான் மட்டும் இல்லாமல் வேறு பல முன்னணி நடிகைகளின் படமும் அப்படியான நிலையில் தான் இருந்தது.
இப்படி மோசமான முறையில் எடிட் செய்பவர்கள் தங்களுடைய திறமையை நல்ல முறையில் பயன்படுத்தினால் அவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கும்.
இப்படி மோசமான முறையில் பயன்படுத்துவது நான் ஏற்கவில்லை. தயவு செய்து அவர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று பேசியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.