அம்மாகிட்ட சொல்லி சுத்தி போட சொல்லுங்க.. எம்புட்டு அழகு.. இளசுகளை பாடாய் படுத்தும் பிரக்யா நாக்ரா..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான அஞ்சலி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரக்யா நாக்ரா. காதல் என்ற சீரியலில் வெப்சீரிஸ் நடித்ததன் மூலம் இணையவாசிகள் மத்தியில் பிரபலமான இவர் அதை தொடர்ந்து எருமசாணி என்ற யூடியூப் சேனலில் தோன்றி ரசிகர் மத்தியில் இன்னும் பிரபலமானார்.

நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுடன் இயங்கிவரும் இவர் திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றி வருகிறார். டிக் டாக் டப்ஸ்மாஷ் வீடியோ செயலிகளில் தன்னுடைய நடிப்பு மற்றும் நடன திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் பிரக்யா நாக்ரா.

தொடர்ந்து ஹீரோயினாக நடிக்கும் ஆசையில் இருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்றாடம் என்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

சமீபத்தில் ஓணம் பண்டிகையை கொண்டாடும் விதமாக இவர் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. தாவணி பாவாடை சகிதமாக கோயிலில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அம்மாகிட்ட சொல்லி சுத்தி போட சொல்லுங்க.. எம்புட்டு அழகு..என்று வர்ணித்து வருகின்றனர்

---- Advertisement ----

---- Advertisement ----