சீரியலில் புடவை கட்டிக்கொண்டு தோன்றும் பிரவீனாவா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

விஜய்டிவியின் ராஜா ராணி2 சீரியலில் ஸ்டிரிக்ட்டான மாமியாராக நடித்து வருபவர் சிவகாமி. இவரது நிஜப் பெயர் பிரவீனா நாயர். கேரள மாநிலம் செங்கணசேரியில் பிறந்தவர். மலையாளத்தில் பிரபலமான நடிகை மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட்.

அப்பா கல்லூரி பேராசிரியர். பிரவீனா 18 வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். முதன்முதலில் 1992 ஆம் ஆண்டு கௌரி என்ற படம் மூலம் அறிமுகமானார். தூர்தஷன் நிகழ்ச்சியான ஸ்வப்த ஸ்வரங்கள் இசை நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

தொடர்ந்து ராஜதந்திரம், கலியூஞ்சல்,அக்னிசாட்சி, இங்கிலீஷ் மீடியம், வசந்தியும் லட்சுமியும் பின்னே நானும், ஸ்வர்ணம், மயில் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.மலையாள சினிமாவில் அனில் பாபுவின் கலியூஞ்சல் படத்தில் திலீப்புக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

ஓரல் மாத்திரம் தி ட்ரூத் மற்றும் எழுப்புண்ணா தரகன் ஆகிய படங்களில், மம்மூட்டியின் சகோதரியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் பிரவீணா. சினிமாவில் நடித்துக்கொண்டே சின்னத்திரையிலும் அறிமுகமானார் பிரவீனா.

மலையாளத்தில் ஸ்வப்னம், மேகம் தி மவுனம், மழவில் மனோரமாவில் மலக்கமர் மற்றும் மொக்கக்கடல் ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார்.

---- Advertisement ----

இதையும் படிங்க : “சிங்கிள் பசங்க சாபம் சும்மா விடாது..” – கணவருடன் நெருக்கமாக தாமிரபரணி பானு..! – வைரல் புகைப்படம்..!

கைராலி டிவியில் மம்மி & மீ, ஆசியநெட்டில் நகைச்சுவை நட்சத்திரங்கள் மற்றும் ஸ்டார் சிங்கர் உள்ளிட்ட பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்துள்ளார்.

தமிழில், பிரியமானவள் சீரியல் தான் இவரை தமிழ் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அப்லோடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், டீசர்ட், சட்டை என விதவிதமான உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், சீரியலில் புடவை கட்டிக்கொண்டு தோன்றும் பிரவீனாவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

---- Advertisement ----