இங்க பாருங்க கூத்தை.. இன்னும் முன்னணி ஹீரோயின் ஆகல.. அதுக்குள்ள இம்புட்டு பில்டப்பா..??

பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது மீடியா பயணத்தை தொடங்கிய நடிகை பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் ஹீரோயினாகவும் வாய்ப்பை பெற்றார்.

சின்னத்திரையில் சில காலம் நடித்து வந்த இவர் தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் கிடைக்கவே சினிமாவிற்குள் நுழைந்து தற்பொழுது பிரபல பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகர் வைபவ் நடிப்பில் வெளியான மேயாதமான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர் தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன தற்போது இவரது கையில் கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்கள் கையில் உள்ளன என்னதான் பிரபல நடிகையாக இருந்தாலும் இன்னும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் பிரியா பவானி சங்கருக்கு இருக்கிறது.

சமீபத்தில் பிரபல நடிகரும் இயக்குனருமான எஸ் ஜே சூர்யா உடன் பிரியா பவானி சங்கர் காதலில் இருக்கிறார் என்ற கிசுகிசு பரவியது. இதனைத் தொடர்ந்து நான் ஜெயசூரியாவை காதலிக்கவில்லை இவர் தன்னுடைய காதலன் என்று ராஜ் வேலுவை அறிமுகம் செய்து வைத்தார்.

---- Advertisement ----

நடிகை பிரியாமணிக்கு விரைவில் திருமணம் செய்து திருமண வாழ்க்கையில் செட்டில் ஆக உள்ள நடிகை பிரியா பவானி சங்கர் ஒரு படத்திற்கு 20 லட்சம் முதல் 50 லட்சம் வரை சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது.

தற்போது இயக்குனர் ஹரி இயக்கும் யானை என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் பிரிய பவனி சங்கர் தொடர்ந்து படங்களில் நடிப்பதை வேகவேகமாக செய்து வருகின்றார்.

இந்நிலையில், தற்போது கிழக்கு கடற்கரை சாலையில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களா ஒன்றை வாங்கியுள்ளார் பிரியா பவானி சங்கர் மட்டுமில்லாமல் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றையும் வாங்கியுள்ளார்.

இதனை பார்த்த சக நடிகைகள் கோடிகளில் சம்பளம் வாங்கும் நம்மால் கூட ஈசிஆரில் இந்த விலையில் பங்களா வாங்க முடியவில்லை. ஆனால் பிரியா பவானி சங்கர் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய பங்களா வாங்கிவிட்டார் என்ற புகைச்சல் இருக்கிறார்களாம்.

மேலும் முன்னணி ஹீரோயினாக அகல.. அதுக்குள்ளே இம்புட்டு பில்டப்பா என்ற பேச்சும் கோடம்பாக்கத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

---- Advertisement ----