மலைக்கு நடுவே கிளாமர் மலை.. பிரியா பவானி ஷங்கர் போஸ்..! சூடேறும் இளசுகள்..!

சின்னத்திரையில் வலம் வரும் நடிகைகளுக்கு மட்டுமல்ல தொகுப்பாளினிகளுக்கும் சினிமாவில் தனி இடம் கிடைத்து வருகிறது. அந்த வகையில் நடிகை பிரியா பவானி ஷங்கர் ஆரம்பத்தில் இந்தியத் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியதை அடுத்து திரைப்பட வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் இவர் கல்யாண முதல் காதல் வரை என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்ததை அடுத்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

பிரியா பவானி ஷங்கர்..

2017-ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் வெளி வந்த மேயாத மான் என்ற திரைப்படத்தில் எஸ் மதுமிதா என்ற கேரக்டரை பக்காவாக செய்ததை அடுத்து 2018-ல் கடைக்குட்டி சிங்கம் படத்தில் பூம்பொழில் செல்லம்மாவாக நடித்து ரசிகர்களின் மனதை ஈர்த்தார்.

இதனை அடுத்து 2019-ல் மாஸ்டர் படத்தில் நடித்த இவர் களத்தில் சந்திப்போம், கசடதபற, ஓ மன பெண்ணே, ஹாஸ்டல், யானை, குருதியாட்டம், திருச்சிற்றம்பலம், அகிலன், பத்து தல, ருத்ரன், பொம்மை போன்ற பல படங்களில் நடித்து தனக்காக ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டார்.

---- Advertisement ----

வளரும் நடிகையான பிரியா பவானி ஷங்கர் சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடியவர். இன்ஸ்டா பக்கத்தில் இவர் வெளியிடக் கூடிய புகைப்படத்தை பார்ப்பதற்கு என்றே ரசிகர் படை காத்திருக்கும்.

மலைக்கு நடுவே கிளாமர்..

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் என்ன சொல்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

சுற்றிலும் நீர் இருக்க அனைவரது பார்வையும் சுண்டி இழுக்க கூடிய வகையில் குட்டையான உடையில் கிளாமராக காட்சி அளித்திருக்கும் பிரியா பவானி ஷங்கரின் புகைப்படங்கள் ஹார்ட் பீட்டை அதிகரிக்க வைத்துள்ளது.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் ஆஸ்தியா நாட்டுக்குச் சென்றுள்ள பிரியா பவானி ஷங்கர் அங்கு இருக்கும் சுற்றுலா பகுதிகளில் எடுத்து வெளியிட்ட புகைப்படங்கள் என சொல்லலாம்.

சூடான இளசுகள்..

குறிப்பாக Hallstatt பகுதிக்கு சென்று இருக்கக்கூடிய பிரியா பவானி ஷங்கர் இங்கு இயற்கையோடு இயற்கையாக மலைகளுக்கும் மத்தியில் தண்ணீருக்கு நடுவே நின்ற படி எடுத்திருக்கும் போட்டோக்கள் தான் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.

கூலிங் கிளாஸ் அணிந்த படி தண்ணீருக்கு வெளியே சிரிக்கும் தாமரையாய் ரசிகர்களை சிலிர்க்க வைத்திருக்கும் போட்டோஸ் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்திருக்கும் ரசிகர்கள் அனைவரும் இந்த பேரழகியின்  அழகுக்கு தான் தமிழில் அதிகப்படியான படங்கள் வந்து சேர்வதாகவும், தற்போது கைவசம் அரை டஜன் படங்களுக்கும் மேல் இருந்தாலும் அசராமல் நடித்து வருகிறார் என்று சொல்லி வருகிறார்கள்.

தன் காதலனோடு அடிக்கடி டேட்டிங் செல்ல வாய்ப்பு கிடைக்கும் போது சரியாக பயன்படுத்திக் கொள்ளும் பிரியா பவானி ஷங்கர் தற்போது மலைகளுக்கு மத்தியில் நின்ற படி தந்திருக்கும் போசை பார்த்து மலைத்திருக்கும் ரசிகர்கள் அனைவரும் அந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் அச்சச்சோ பிடிச்சிருக்கு உன்னை எனக்கு பிடிச்சிருக்கு என்ற பாடல் வரிகளை பாடி பாட்டின் சிரித்தேன் மறைத்தேன் என உன்னை நான் நினைத்தேன் என்று பாடி வருகிறார்கள்.

---- Advertisement ----