தொளதொள சட்டை.. கொட்டும் அருவில் டக்கர் போஸ்.. – திணறடிக்கும் பிரியா பவானி ஷங்கர்..!

செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்து வருகிறார். இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாதமான் என்ற திரைப்படத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தன்னை ஒரு நடிகையாக நிரூபித்தவர்.

சமீபத்தில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் ஹீரோவாக நடித்திருந்த யானை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மட்டுமல்லாமல் நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்திலும் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக தோன்றினார்.

தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் தற்பொழுது பொம்மை, அகிலன், ருத்ரன், பத்து தல, இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சினிமா மட்டுமல்லாமல் வெப்சீரிஸ் களிலும் கவனம் செலுத்திவரும் பிரிய பவானி ஷங்கர் வெப் சீரியல்களிலும் நடித்து வருகிறார். கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் ஹீரோயினாக அறிமுகமான இவர் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்.

தற்போது, தன்னுடைய காதலருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கிருந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அவற்றை அன்றாடம் நம்முடைய தளத்தில் நாம் பார்த்து வருகிறோம்.

---- Advertisement ----

அந்த வகையில் தற்போது அறிவித்து அடியில் தொளதொள சட்டை அணிந்து கொண்டு கருப்பு அருவி போன்ற தன்னுடைய கூந்தலை படரவிட்டு அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களைக் கவர்ந்து வருகிறது.

மட்டுமில்லாமல் ஸ்கை டைவிங் செய்த வீடியோ ஒன்றையும் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

---- Advertisement ----